தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உளுந்து பயிரில் மகசூல் பெருக்க ஆலோசனை

Go down

உளுந்து பயிரில் மகசூல் பெருக்க ஆலோசனை Empty உளுந்து பயிரில் மகசூல் பெருக்க ஆலோசனை

Post  meenu Fri Mar 22, 2013 12:22 pm

உளுந்து பயிரில் மகசூலை பெருக்க இலை வழி கரைசல் தெளித்து பயன் பெறுமாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தியாகதுருகம் பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பில் மானாவாரியில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மகசூலை பெருக்க தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி சாகுபடி பயிராக வம்பன் 3,4,5 மற்றும் டி.யு., 94 ஆகிய ரக உளுந்து பயிரிடப்பட்டுள்ளது.
செடிகள் செழித்து வளர்ந்து தற்போது பூக்கும் தருவாயில் உள்ளது.
அதிக காய்கள் பிடிக்கவும், மகசூல் அதிகரிக்கவும், தழைச்சத்து, மணிசத்தும் கொண்ட டை அமோனியம் பாஸ்பேட் உரத்தை கரைசலாக்கி இலைவழியே தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு 4 கிலோ உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதனை 2 சத கரைசலாக வடித்தெடுத்து, உளுந்து பயிரின் இலை வழியே நன்கு நனையும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
இதனால் அதிக பூக்கள் பிடிப்பதுடன், அவை காய்களாகி அதிக மகசூல் கிடைக்க வழி செய்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum