தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

Go down

'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் Empty 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

Post  ishwarya Sat Mar 16, 2013 5:04 pm

இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் கிறிஸ்துதாஸ் என்ற கிறிஸ்து மூர்த்தி இன்று போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

மணிரத்னம் இயக்கிய கடல் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் உள்ளன. பைபிள் கல்லூரியில் அரவிந்தசாமியும், அர்ஜுனும் மாணவர்களாக சேர்கின்றனர். அப்போது அண்ணனை சாத்தான் என்றும் தம்பியை ஏசு என்றும் சொல்வது போல் வசனம் உள்ளது.

இன்னொரு காட்சியில் நாயகன் பிரசவம் பார்க்கிறான். அப்போது கையில் படும் ரத்தத்தை ஏசுவின் ரத்தம் என்கிறார். இவை கிறிஸ்தவர்களை நோகடிப்பவை ஆகும். அர்ஜுன் தன்னை சாத்தான் என கூறிக்கொள்கிறார். அவரது பெயர் பெர்க்மான்ஸ் என குறிப்பிடப்படுகிறது. பெர்க்மான்ஸ் என்பவர் கிறிஸ்தவ பாடகர் ஆவார்.

ஏசுவின் படத்தை நாயகன் உடைப்பது போன்றும் காட்சி உள்ளது. கிளைமாக்சில் சாத்தான் ஜெயித்து விட்டது என்ற வசனம் வருகிறது. ஆண்டவர் மீது சத்தியம் என்ற வசனம் உள்ளது. கிறிஸ்தவர்களை புண்படுத்தும் இத்தகைய 6 காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'கடல்' படத்தில் ரூ.17 கோடி நஷ்டம்: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் மணிரத்னம் மீது விநியோகஸ்தர் புகார்
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» கடல் ரூ. 17 கோடி நஷ்டம்: மணிரத்னம், சுகாசினி மீது புகார்.
» 'ஆதிபகவன்' படத்தில் இந்துக்கள் பற்றி அவதூறு: தலைப்பை மாற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்
» கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum