உதடுகள் புரியும் ரகசியம் தெரியுமா…?
Page 1 of 1
உதடுகள் புரியும் ரகசியம் தெரியுமா…?
55
kadal-lipகொஞ்சல்.. காதலில் மட்டுமில்லை, காமத்திலும் கூட ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்.. கொஞ்சுவது பலவகை.. ஒவ்வொன்றிலும் ஒரு புது சுகம் இருக்கத்தான் செய்யும். ரசித்துச் செயயும்போது அதை ருசித்து அனுபவிக்கலாம்.
எப்படி வேண்டுமானாலும் ஒருவரைக் கொஞ்சலாம். ஆனால் முத்தமிட்டுக் கொஞ்சும்போது கிடைக்கும் சுகம் இருக்கிறது தெரியுமா… அலாதிதான்.
முத்தமிடுவதே ஒரு தனிக்கலை… இலக்கணம் இல்லாத புதுக்கவிதைதான் முத்தம். இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்றில்லை. எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். தலை முதல் பாதம் வரை எல்லா இடத்திற்கும் முத்தங்கள் பாயலாம். பெறுவோருக்கும் சரி, தருவோருக்கும் சரி, இன்பம் பயக்கக் கூடியதுதான். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட இடங்கள் இருக்கும். அந்த இடங்களில் பாயும் முத்தங்களுக்கு பல ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தின் ‘சக்தி’ இருக்குமாம்.
உன் இதழ்களை நோக்கி என் ஒரு முத்தத்தை அனுப்பி வைக்கிறேன்… ஜில்லென்று இருக்கட்டும் என் உயிர்.. உதடுகளில் கொடுக்கும் முத்தத்தை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். உதடுகளை சாதாரணமாக கருதி பச்சக் பச்சக் என்று வைக்காமல் ..அந்த சின்ன இதழ்களோடு கொஞ்ச நேரம் பேச வேண்டும்… இதழ்களுக்கு அருகில் உங்களது இதழ்களை வைத்து கவிதை பேசுங்கள், கொஞ்சிப் பேசுங்கள், வர்ணியுங்கள்.. அதன் பிறகு மெதுவாக சின்னதாக அழகாக ஒரு முத்தம் வையுங்கள்.
பிறகு இன்னொன்று.. அப்படியே மேலும் ஒன்று… இப்படியாக தொடங்கி, பிறகு சுவைக்க ஆரம்பிக்க வேண்டும். பெண்களின் உதடுகள் மலரினும் மெல்லியவை… ரோஜாவிலும் இனியவை… எனவே காயப்படாமல் சுவையுங்கள், வலிக்காமல் கடியுங்கள். இதழோடு இதழ் சேரும் நேரம் சுருக்கமாக இருக்காமல் முடிந்தவரை நீளட்டும்.. போகும் வரை போகட்டும்… சொர்க்கத்தின் திறப்புக்கு முத்தம்தான் முதல் சாவி.. மீண்டும் மீண்டும் முத்தமிடு என் இதழ்களில் உன் இதழ் பதித்து என் உயிரைக் கவ்வி உனக்குள் கொண்டு செல் உன் இதழ் அமுதத்தில் என் உயிர் பதித்து என்னைப் பறித்துச் செல்… போதும் இந்தப் பிறவி.. உன் இதழோடு அமிழ்ந்து போகிறேன்… இப்படி அனுபவித்து மெய் மறந்து பேசும் அளவுக்கு உங்களது முத்தம் இருக்க வேண்டும்.
இதழ் முத்தம் முடிந்த பிறகு அப்படியே கண்ணுக்குச் செல்லுங்கள். மெல்லக் கண் மூடி உங்கள் அழகு ஓவியத்தை ரசியுங்கள் சில நொடிகள். பிறகு அவரது கண்களில் மெனமையாக இதழ் பதித்து முத்தம் கொடுங்கள். சொக்கிப் போவார் உங்கள் சுந்தரி. இரு கண்களிலும் இதழ் பதித்து முத்தம் கொடுத்த கையோடு நாசிக்கு வாருங்கள். குத்தீட்டி போல சிலருக்கு நாசி நிற்கும்.. சிலருக்கு குடைமிளகாய் போல.. எப்படி இருந்தால் என்ன.. அழகாக, மென்மையாக நுனி நாக்கால் சில நொடி வருடிக் கொடுங்கள்.. பிறகு முத்தம் வையுங்கள்.
பெண்களுக்கு பிடித்த இன்னொரு இடம் காது மடல் – முன்பும், பின்பும்… காது மடல்களும், காதுக்குப் பின்னால் உள்ள பகுதியும் உணர்சசிகள் உறங்கிக் கிடக்கும் ஒரு இடமாகும். மென்மையாக கிசுகிசுத்தபடி முத்தம் தரும்போது உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் உணர்வுகள் புடைத்தெழுந்து புத்துணர்ச்சியோடு மனசெல்லாம் ததும்பி நிற்கும்.
காதுக்குள் மெல்லிசாக பெயர் சொல்லியோ, செல்லப் பெயர் சொல்லியோ, செக்ஸியாக பேசியோ கிசுகிசுக்கும்போது பெண்களுக்கு இன்பம் தூண்டப்படுகிறதாம். பிறகு கழுத்து. பின்னங் கழுத்தில் ஆரம்பித்து முன்னங் கழுத்து வரை அடுத்தடுத்து சின்னச் சின்னதாக முத்தமிட்டு வரும்போது கூடவே உங்கள் மனசுக்குள் உங்களவர் ஏறி வந்து அமர்ந்து கொண்டு இனிய இம்சைக்குத் தயாராவார் பாருங்கள்…
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதழ் சொல்லும் ரகசியம் தெரியுமா...?
» சிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா?
» ஹன்சிகாவின் அழகின் ரகசியம் தெரியுமா?
» ஸ்ரேயாவின் மினுக்கும் சருமத்தின் ரகசியம் தெரியுமா?
» மற்றவருடன் நெருங்கி பழக நம்பிக்கை எப்படி துணை புரியும்?
» சிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா?
» ஹன்சிகாவின் அழகின் ரகசியம் தெரியுமா?
» ஸ்ரேயாவின் மினுக்கும் சருமத்தின் ரகசியம் தெரியுமா?
» மற்றவருடன் நெருங்கி பழக நம்பிக்கை எப்படி துணை புரியும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum