யாழில் மாமியர் கொடுமைக்கு ஆளான ஆண்மகன்! தீமூட்டி தற்கொலை!
Page 1 of 1
யாழில் மாமியர் கொடுமைக்கு ஆளான ஆண்மகன்! தீமூட்டி தற்கொலை!
0
காலம் காலமாக மாமியார் கொடுமை என்பது பெண்களுக்கே இருந்து வந்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் மாமியார் கொடுமை தாங்க முடியாது ஆண்மகன் ஒருவர் தனக்கு தீமூட்டிக்கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் யாழ். மல்லாகம் நீதிவான் நலன்புரி வீதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (18.05.2012) நடைபெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (23) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவர் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் குடும்ப வறுமை காரணமாக தான் டோகா கட்டாருக்குச் சென்று யாழ்ப்பாணத்திற்கு மூன்று மாதங்கள் விடுமுறையில் வந்ததாகவும், மனைவி (29) தன்னை தனக்கு வேண்டாம் எனக் கூறி தனது தாயாரின் வீட்டில் இருந்து வந்ததாகவும் தான் அவளோடு வாழ வேண்டும் என அவளின் தாயாரிடம் பல முறை கேட்டும் தன்னை அவளோடு சேர்ந்து வாழ விடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மாமியாரால் பலதடவை குறித்த நபர் வார்த்தை மூலம் அவமானப்படுத்தப்பட்டுளார் என்றும் தெரியவருகிறது.
இதனால் மனமுடைந்து மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும் பொலிஸாருக்கு உயிருடன் இருக்கும் போது கொடுத்த வாக்குமூலத்தில் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யாழில் நடைபெற்ற விசித்திர கள்ளக்காதல் சம்பவம்
» யாழில் நடைபெற்ற விசித்திர கள்ளக்காதல் சம்பவம்
» அதிர்ச்சித் தகவல் – யாழில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ்!
» யாழில் புடவைவியாபாரிகள் இருவர் பொலிசாரால் கைது!
» யாழில் ஒருவாரத்தில் மட்டும் 5 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள்!
» யாழில் நடைபெற்ற விசித்திர கள்ளக்காதல் சம்பவம்
» அதிர்ச்சித் தகவல் – யாழில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ்!
» யாழில் புடவைவியாபாரிகள் இருவர் பொலிசாரால் கைது!
» யாழில் ஒருவாரத்தில் மட்டும் 5 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum