தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று இடங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு! இரு சிறுமிகள்,பெண் பலாத்காரம்!

Go down

மூன்று இடங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு! இரு சிறுமிகள்,பெண் பலாத்காரம்! Empty மூன்று இடங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு! இரு சிறுமிகள்,பெண் பலாத்காரம்!

Post  meenu Sat Mar 16, 2013 12:29 pm



எப்பாவல – கல்வடுவாகம பிரதேசத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 7ம் திகதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இது குறித்து நேற்று (09) எப்பாவல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் குருநாகல் – வில்கொடவத்தை பகுதி வீடொன்றில் புகுந்த நபர் வீட்டில் இருந்த 29 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

கடந்த 8ம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து நேற்று (09) குருநாகல் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, மாத்தளை – நாகொல்ல – உக்குவெல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது
» பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு
» பவர்கட் நேரத்தில் காரில் கடத்தி சென்று18 வயது பெண் பாலியல் பலாத்காரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum