தைப்பூச திருவிழா : திருச்செந்தூரில் புனித நீராடி தரிசனம்
Page 1 of 1
தைப்பூச திருவிழா : திருச்செந்தூரில் புனித நீராடி தரிசனம்
திருச்செந்தூர்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி குமரவிடங்கபெருமான் சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டகப்படிக்கு வந்தடைந்தார். மாலையில் அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி எழுந்தருளி உள்மாடவீதிகள், ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக இரவில் கோயிலை சேர்ந்தார். தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், ஏராளமான வாகனங்களில் முருகன் உருவப்படத்தை மின்னொளியில் அலங்கரித்து பக்தி பாடல்களை இசைத்தபடியும் வந்து குவிந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம் மற்றும் நாழிகிணறு பஸ் நிலையம், அனைத்து தெருக்களிலும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
பழநி தேரோட்ட கோலாகலம்
மூன்றாம் படை வீடான பழநியில் தைப்பூசத் திருவிழா 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி தோளுக்கு இனியாள் வாகனத்தில் சண்முகநதியில் எழுந்தருளினார். பின்னர் மேஷ லக்கனத்தில் சுவாமி தேரேற்ற நிகழ்ச்சியும் மாலை 4.20 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி குமரவிடங்கபெருமான் சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டகப்படிக்கு வந்தடைந்தார். மாலையில் அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி எழுந்தருளி உள்மாடவீதிகள், ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக இரவில் கோயிலை சேர்ந்தார். தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், ஏராளமான வாகனங்களில் முருகன் உருவப்படத்தை மின்னொளியில் அலங்கரித்து பக்தி பாடல்களை இசைத்தபடியும் வந்து குவிந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம் மற்றும் நாழிகிணறு பஸ் நிலையம், அனைத்து தெருக்களிலும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
பழநி தேரோட்ட கோலாகலம்
மூன்றாம் படை வீடான பழநியில் தைப்பூசத் திருவிழா 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி தோளுக்கு இனியாள் வாகனத்தில் சண்முகநதியில் எழுந்தருளினார். பின்னர் மேஷ லக்கனத்தில் சுவாமி தேரேற்ற நிகழ்ச்சியும் மாலை 4.20 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
» தைப்பூச தகவல்கள்-20
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
» தைப்பூச தகவல்கள்-20
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum