தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தவறு செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமா இந்திய அரசு?

Go down

தவறு செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமா இந்திய அரசு?  Empty தவறு செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமா இந்திய அரசு?

Post  meenu Mon Feb 11, 2013 12:24 pm


அமெரிக்காவில் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களான மெர்க், கிளாக்சோ-ஸ்மித் கிளைன், பைசர், இலி லில்லி ரான்பாக்ஸி, அப்பாட் ஆகிய நிறுவனங்களின் பல்வேறு முறைகேடுகளுக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டகம் கடும் அபராதங்களை விதித்துள்ளது.

மெர்க் நிறுவனத்தின் வயாக்ஸ் என்ற வலிநிவாரணி 7 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் தொடர்ந்து அது கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் மெர்க் நிறுவனத்திற்கு 950மில். டாலர்களை அமெரிக்க அரசு அபராதமாக விதித்துள்ளது.

மற்றொரு பன்னாட்டு நிறுவனமான கிளாக்சோ-ஸ்மித் கிளைன் நிறுவனம் தனது "அவாண்டியா" மற்றும் பிற 9 மருந்துகளை மார்க்கெட் செய்ததில் முறைகேடுகள் செய்ததற்காகவும் விலை மோசடி செய்ததற்காகவும் 3 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கபட்டது.

'பெக்ஸ்ட்ரா' என்ற மருந்தை மார்க்கெட் செய்ததில் மோசடி செய்ததாக ஃபைசர் நிறுவனத்திற்கு 2.3 பில்லியன் டாலர்கள் அபராதம் போடப்பட்டுள்ளது.

அதேபோல் இலி லில்லி ரான்பாக்ஸி நிறுவனம் தனது "சைபிரெக்சா" என்ற மருந்தை அறமற்ற முறையில் விதிகளுக்குப் புறம்பாக விற்றதாக 1.4 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அப்பாட், போரிங்கர், ப்ரான் மெடிகல் ஆகிய நிறுவனங்களுக்கும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக அபராதம் விதிக்கபட்டுள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டு, சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட மருந்துகள் சில கள்ளச் சந்தை மூலம் விற்கப்படுவது நடைபெற்று வருகிறது. இந்திய நிறுவனங்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் இந்திய டிரக்ஸ் அன்ட் காஸ்மெடிக்ஸ் சட்டம், 1840, மற்றும் 'டிரக்ஸ் அன்ட் மேஜிக் ரெமெடீஸ் சட்டம், 1955 மற்றும் சில மருத்துவச் சட்டங்களை பல நிறுவனங்கள் மீறி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் கருவளத்தை உருவாக்கும் என்று தவறாக விற்கப்பட்டு வந்த 'லெட்ரோசோல்' என்ற மருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னமும் கள்ளச்சந்தையில் புழங்கி வருவதாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்திய அரசு இதற்கெல்லாம் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை என்று பல்வேறு தரப்புகளிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளன.

மனித உயிர்களுடன் விளையாடும் பன்னாட்டு உள்நாட்டு மருந்து நிறுவனங்கள், கிளினிக்க டிரையல் மையங்கள் மீது அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்?
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

தவறு செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமா இந்திய அரசு?  Empty 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது'

Post  meenu Mon Feb 11, 2013 12:33 pm

உடல் பருமனானவர்கள் அதனை இளைக்க வைப்பதற்காக படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில், ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக
webdunia photo
FILE
முடியாது என அதிர்ச்சி குண்டை வீசுகிறார்கள் ஆய்வாளர்கள்!

இன்றைய கணினி யுகத்தில் உடல் உழைப்பு எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்து போகிறதோ அந்த அளவுக்கு மனிதர்களுக்கான உடல் பருமன் பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகிறது.

முன்பெல்லாம் 40 வயதுகளில்தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்னைகள் தலை தூக்கின.ஆனால் இன்றோ 30களிலேயே இப்பிரச்னை மனிதர்களை பாடாய்படுத்துகிறது.

அவ்வாறு உடல் பருமன் அடைந்தவர்கள், ஒருகட்டத்திற்கு பின்னர்தான் சுதாரித்துக்கொண்டு உடற்பயிற்சி, டயட் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு பின்னர் உடல் தனது பழைய நிலையை எட்டிவிடுவதாக பலர் கூறுவதன் அடிப்படையில்தான், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் மேற்கூறிய உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றை பின்பற்ற தொடங்குகிறார்கள்.

ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றினால் உடல் எடை குறைந்து ஒல்லியானாலும், ஏறக்குறைய ஓராண்டுக்குள் உடல் மீண்டும் பருமன் ஆகிவிடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

சுமார் 25,000 பேர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.

1946 ஆம் ஆண்டில் பிறந்த 5,362 ஆண் மற்றும் பெண்களையும், 1958 ஆம் ஆண்டில் பிறந்த 20,000 பேர்களையும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர் விஞ்ஞானிகள்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடல் எடை,ரத்த அழுத்தம் மற்றும் அவர்களது வாழ்க்கை நடைமுறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கூறிய இரு பிரிவினருமே உடல் பருமன் அடைந்த பின்னர் உடற்பயிற்சி மற்றும் டயட்டினால் ஒல்லியாகி,பிறகு மீண்டும் படிப்படியாக உடல் எடை அதிகரித்தது தெரியவந்தது.

அதாவது ஒருவர் ஒருமுறை குண்டாகிவிட்டால், மீண்டும் ஒருபோதும் ஒல்லியாக முடியாது. இடையில் ஒல்லியானாலும் உடல் மீண்டும் பழைய பருமன் நிலைக்கே சென்றுவிடும்.

அதற்காக ஏற்கனவே உடல் பருமனாகிவிட்டவர்கள் டயட் இருப்பது, உடற் பயிற்சி செய்வது போன்றவற்றை கைவிட்டுவிட வேண்டாம்.குறைவாக மற்றும் கலோரி குறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற் பயிற்சி போன்றவை உடல் மேலும் குண்டாகாமலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாலும் தடுக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள், இப்பிரச்னைக்கு உள்ள ஒரே தீர்வு,முன்கூட்டியே உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்வதுதான் என்கிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தவறு செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமா இந்திய அரசு?
» செல்பேசி மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவு அதிகரித்தால் அபராதம்: மத்திய அரசு
» இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம்
» எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து
» அரசு சித்த மருத்துவமனையில் மருந்து இல்லை: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாற்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum