பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?
Page 1 of 1
பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?
பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.
குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?
» பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம்
» நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?
» பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம்
» நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum