விராலிமலை விராலிமலை
Page 1 of 1
விராலிமலை விராலிமலை
தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில், திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலை அமைந்திருக்கிறது. தற்போது நகரம் சூழ்ந்த பகுதியாகிவிட்ட விராலி மலை முற்காலத்தில் அடர் வனப் பகுதியாக விளங்கியது.இந்த மலையில் பத்தாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டதாக கருதப்படும் புகழ் பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது.
இந்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் தனது "திருப்புகழ்'' என்கிற நூலில் பதினெட்டு பாடல்களில் ஆராதிப்பதன் மூலம் இந்த திருக்கோவிலின் சிறப்பினை அறியலாம். இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு கூறுவதாக ''அகத்தியர் 12000'' என்ற நூலில் பாடல் ஒன்று காணக் கிடைக்கிறது.
ஆச்சர்யகரமாய் தற்போதிருக்கும் முருகன் கோவிலைப் பற்றிய விவரங்கள் அந்த பாடலில் இல்லை. விராலி என்றொரு மலை இருக்கிறது. அங்கே சித்தர்கள், முனிவர்கள் பலகோடி காலம் வசிப்பார்கள். இந்த மலையில் ஒரு சுனை இருக்கிறது அந்த சுனையை மிக இலகுவாக யாராலும் காணமுடியாது அத்துடன் அங்கு உதக நீர் நிலையும் இந்த மலையில் இருக்கின்றது என்கிறார் அகத்தியர்.
விராலிமலையின் உச்சியில் ஒரு கணேசர் கோவில் இருக்கின்றது. அந்த கோவிலுக்கு வடக்குப்பக்கமாக கல்லால மரம் ஒன்று உள்ளது என்றும் அந்த மரத்தருகில் சிரோதன நொட்டை மண்டபமும், அதை தொடர்ந்து புளியிறங்கு வாய்க்காலும் காணப்படுகிறது.அந்த வாய்க்காலை ஒட்டி உள்ள மண்டபத்தில் குறிப்பாக ஒரு கரு நெல்லி மரம் உள்ளதென்றும் அந்தமரத்தடியில் பரஞ்சோதி முனிவர் தவம் செய்தார் என்றும் குறிப்பிடுகிறார்.
தவம் செய்த முனிவர் பின்னர் ''ஞான நூல்'' என்னும் பெருநூலைப் பாடி வைத்தார். அந்த நூல் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்றும், அவ்வாறு கிடைத்தால் பூவுலகில் சித்துக்கள் அதிகமாகி மக்கள் வருந்துவர் என்று பக்கத்தில் இருக்கும் கற் குகையில் வைத்து சாபமிட்டார் என்கிறார் குருவருள் துணையுடன் இந்த மலைக்கு வருபவர்களுக்கு அந்த நூல் கிடைக்குமானால் அவர்களுக்கு அது வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இந்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் தனது "திருப்புகழ்'' என்கிற நூலில் பதினெட்டு பாடல்களில் ஆராதிப்பதன் மூலம் இந்த திருக்கோவிலின் சிறப்பினை அறியலாம். இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு கூறுவதாக ''அகத்தியர் 12000'' என்ற நூலில் பாடல் ஒன்று காணக் கிடைக்கிறது.
ஆச்சர்யகரமாய் தற்போதிருக்கும் முருகன் கோவிலைப் பற்றிய விவரங்கள் அந்த பாடலில் இல்லை. விராலி என்றொரு மலை இருக்கிறது. அங்கே சித்தர்கள், முனிவர்கள் பலகோடி காலம் வசிப்பார்கள். இந்த மலையில் ஒரு சுனை இருக்கிறது அந்த சுனையை மிக இலகுவாக யாராலும் காணமுடியாது அத்துடன் அங்கு உதக நீர் நிலையும் இந்த மலையில் இருக்கின்றது என்கிறார் அகத்தியர்.
விராலிமலையின் உச்சியில் ஒரு கணேசர் கோவில் இருக்கின்றது. அந்த கோவிலுக்கு வடக்குப்பக்கமாக கல்லால மரம் ஒன்று உள்ளது என்றும் அந்த மரத்தருகில் சிரோதன நொட்டை மண்டபமும், அதை தொடர்ந்து புளியிறங்கு வாய்க்காலும் காணப்படுகிறது.அந்த வாய்க்காலை ஒட்டி உள்ள மண்டபத்தில் குறிப்பாக ஒரு கரு நெல்லி மரம் உள்ளதென்றும் அந்தமரத்தடியில் பரஞ்சோதி முனிவர் தவம் செய்தார் என்றும் குறிப்பிடுகிறார்.
தவம் செய்த முனிவர் பின்னர் ''ஞான நூல்'' என்னும் பெருநூலைப் பாடி வைத்தார். அந்த நூல் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்றும், அவ்வாறு கிடைத்தால் பூவுலகில் சித்துக்கள் அதிகமாகி மக்கள் வருந்துவர் என்று பக்கத்தில் இருக்கும் கற் குகையில் வைத்து சாபமிட்டார் என்கிறார் குருவருள் துணையுடன் இந்த மலைக்கு வருபவர்களுக்கு அந்த நூல் கிடைக்குமானால் அவர்களுக்கு அது வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» விராலிமலை
» விராலிமலை விராலிமலை
» விராலிமலை விராலிமலை
» விராலிமலை முருகா! மயிலேறும் அழகா!
» விராலிமலை முருகா! மயிலேறும் அழகா!
» விராலிமலை விராலிமலை
» விராலிமலை விராலிமலை
» விராலிமலை முருகா! மயிலேறும் அழகா!
» விராலிமலை முருகா! மயிலேறும் அழகா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum