வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில்
Page 1 of 1
வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில்
மூலவர் - சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்)
தலவிருட்சம் - பாதிரி மரம்
தீர்த்தம் - வஜ்ஜிர தீர்த்தம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
ஊர் - வல்லக்கோட்டை
மாவட்டம் - காஞ்சிபுரம்
வல்லன் என்ற அரக்கனின் கோட்டையாக இவ்வூர் இருந்துள்ளது. இவன் தேவர்களுக்கு மிகவும் துன்பம் கொடுத்து வந்தான். பொறுத்து பார்த்த தேவர்கள் இவனது துன்பம் மிகவும் அதிகமானவுடன் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமானும் தேவர்களின் குறைகளை கேட்டு, “அசுரன் அழியும் நேரம் வந்துவிட்டது பயப்படவேண்டாம்” என்று அபயம் அளித்தார்.
பின் அசுரனை வதம் செய்து அவனது விருப்பப்படி இவ்வூரை வல்லன் கோட்டையாக்கினார். இதுவே காலப்போக்கில் வல்லக்கோட்டை ஆனது. 7 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய திருமேனி. முருகனுக்கு எதிரே இரட்டை மயில். இந்திரன் தமது குருவாகிய பிரகஸ்பதியிடம் முருகப்பெருமானை வழிபட்டு அருள்பெறுவதற்கு ஒரு சிறந்த இடத்தை உபதேசியுங்கள் என்று கேட்டான்.
அதற்கு அவரும், “பூலோகத்தில் வல்லக்கோட்டை என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் முருகனை வழிபட்டு நலம் பெறுவாய்” என அருள்பாலித்தார். உடனே அவனும் இத்தலம் வந்து தனது வஜ்ராயுதத்தை ஊன்றி ஒரு திருக்குளத்தை உண்டாக்கி, அந்த நீரால் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, தனது இஷ்ட சித்திகளை பெற்று சென்றான். எனவே இத்தல தீர்த்தம் வஜ்ர தீர்த்தம் என்றும் இந்திர தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.
திருவிழாக்கள்....
அறுபடை வீடு போன்று புகழ்பெற்ற இக்கோயிலுக்கு பரணி, கார்த்திகை நாட்களிலும், மற்றும் முருகனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களிலும் விசேஷ பூஜை நடக்கிறது.
போக்குவரத்து வசதி.....
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அல்லது காஞ்சிபுரம் சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
1-11-12_findyour_INNER_468x60.gif
தலவிருட்சம் - பாதிரி மரம்
தீர்த்தம் - வஜ்ஜிர தீர்த்தம்
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
ஊர் - வல்லக்கோட்டை
மாவட்டம் - காஞ்சிபுரம்
வல்லன் என்ற அரக்கனின் கோட்டையாக இவ்வூர் இருந்துள்ளது. இவன் தேவர்களுக்கு மிகவும் துன்பம் கொடுத்து வந்தான். பொறுத்து பார்த்த தேவர்கள் இவனது துன்பம் மிகவும் அதிகமானவுடன் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமானும் தேவர்களின் குறைகளை கேட்டு, “அசுரன் அழியும் நேரம் வந்துவிட்டது பயப்படவேண்டாம்” என்று அபயம் அளித்தார்.
பின் அசுரனை வதம் செய்து அவனது விருப்பப்படி இவ்வூரை வல்லன் கோட்டையாக்கினார். இதுவே காலப்போக்கில் வல்லக்கோட்டை ஆனது. 7 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய திருமேனி. முருகனுக்கு எதிரே இரட்டை மயில். இந்திரன் தமது குருவாகிய பிரகஸ்பதியிடம் முருகப்பெருமானை வழிபட்டு அருள்பெறுவதற்கு ஒரு சிறந்த இடத்தை உபதேசியுங்கள் என்று கேட்டான்.
அதற்கு அவரும், “பூலோகத்தில் வல்லக்கோட்டை என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் முருகனை வழிபட்டு நலம் பெறுவாய்” என அருள்பாலித்தார். உடனே அவனும் இத்தலம் வந்து தனது வஜ்ராயுதத்தை ஊன்றி ஒரு திருக்குளத்தை உண்டாக்கி, அந்த நீரால் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, தனது இஷ்ட சித்திகளை பெற்று சென்றான். எனவே இத்தல தீர்த்தம் வஜ்ர தீர்த்தம் என்றும் இந்திர தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.
திருவிழாக்கள்....
அறுபடை வீடு போன்று புகழ்பெற்ற இக்கோயிலுக்கு பரணி, கார்த்திகை நாட்களிலும், மற்றும் முருகனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களிலும் விசேஷ பூஜை நடக்கிறது.
போக்குவரத்து வசதி.....
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அல்லது காஞ்சிபுரம் சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
1-11-12_findyour_INNER_468x60.gif
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில்
» வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில்
» வல்லக்கோட்டை முருகன் கோவில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
» வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயில்
» வல்லக்கோட்டை முருகன் கோவில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum