தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதல் வணக்கம் சப்த கன்னியருக்கே!

Go down

முதல் வணக்கம் சப்த கன்னியருக்கே! Empty முதல் வணக்கம் சப்த கன்னியருக்கே!

Post  amma Sat Jan 12, 2013 1:19 pm



சப்த கன்னிகளுக்குள் ஏற்பட்ட போட்டியில் யார் பெரியவர், யார் உயர்ந்தவர் என்பதை அறிய பல தலங்களுக்கு சென்றும் தீர்வு கிடைக்காமற் போனது. இறுதியில் எழுச்சூரில் ஏரிக்குள் நீராடி எம்பெருமான் நல்லிணக்கேஸ்வரரை வணங்க முற்பட்ட நேரத்தில், ஏரிக்குள் நல்லிணக்கேஸ்வரர் அருட்காட்சி நல்கி, அவர்கள் அனைவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என்றும் அவர்களுக்குள் போட்டி பொறாமை எழுவது நல்லதல்ல என்றும் கூறி ஆசிர்வதித்தருளினார்.

பின்னர் மகாவிஷ்ணு கருட வாகனத்திலும் பிரம்ம தேவர் அன்ன வாகனத்திலும் ருத்ரர் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி சப்த கன்னியரை ஆசிர்வதித்தார்கள். மும்மூர்த்திகளுடன் சப்த கன்னியர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த ஆலயத்தை தரிசிக்க, திருமணத் தடைகளும் புத்திர பாக்கிய தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

சப்த கன்னியரை வணங்கி வழிபட்ட பின் எம்பெருமான் நல்லிணக்கேஸ்வரரை வழிபடுவது இந்த ஆலய வழிபாட்டு மரபு. சூரிய பகவான் தனக்கேற்பட்ட தோஷங்களிலிருந்து விடுபட, இங்கே சூரிய தீர்த்தம் அமைத்து நீராடி, நல்லிணக்கேஸ்வரரை வணங்கி வழிபட்டார். ஆலயத்தின் வடக்கில் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது.

இதை கமல புஷ்கரணி என்றும் அழைப்பர். சென்னையிலிருந்து 56 கி.மீ. தாம்பரத்திலிருந்து 28 கி.மீ. சென்னைதாம்பரம்காஞ்சிபுரம் சாலையில் ஒரகடம் கூட்டுரோடு (சிப்காட் தொழிற்பேட்டை) அருகில் 3 கி.மீ. தூரத்தில் எழுச்சூர் கிராமம் உள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum