தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகர ஜோதி

Go down

 மகர ஜோதி  Empty மகர ஜோதி

Post  amma Sat Jan 12, 2013 12:05 pm



மகர சங்கர நாளில் தை முதல் தேதி (ஜனவரி 14 ஆம் தேதி) ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்குக் கிழக்காக உள்ள பொன்னம்பல மேட்டில் உத்தேசமாக 6.35 முதல் 6.45-க்குள் ஹரிஹரசுதன் ஆனந்த நாயகன் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி சொரூபமாக 15 செகண்ட் வீதம் மூன்று முறை காட்சி தருகிறார்.

இதை மகர சங்கராந்தியன்று பொன்னம்பல மேட்டில் தேவதை களும் முனிவர்களும் பகவான் அய்யப்பனுக்குத் தீபாராதனை நடத்துகிறார்கள் என்றும், அந்தக் காட்சிதான் ஜோதி என்றும் கூறுவார்கள். வரலாற்றுப்படி, அய்யப்பன் மகர சங்கராந்தியன்று ஜோதியாகப் பக்தர் களுக்குக் காட்சி அளிப்பார் என்பதுதான் சரித்திரம்.

அய்யப்ப பக்தர்களின் மிக முக்கியமான குறிக்கோள் அய்யப்பனைத் தரிசனம் காண்பது, ஜோதி பார்ப்பது என்பதுதான். இதனால் ஜோதிக்கு ஒருநாள் முன்பிருந்தே சபரிமலை வந்து தங்கி விடுபவர்கள் ஏராளம். ஜனவரி 12 ஆம் தேதி சபரிமலையைச் சுற்றியுள்ள இடங்களில் சிறிது இடம் கிடைத்தாலும் போதும் அங்கு உள்ள முட்செடிகளை அகற்றி நாலு கம்புகளை ஊன்றி தங்கள் போர்வையைக் கூடாரம்போல் கூறையாக்கி ஆயிரக்கணக்கான கூடாரங்கள் உண்டாக்குகிறார்கள்.

ஜோதியன்று ஜோதி தெரியும் இடம் எதுவாக இருந்தாலும் (மரக்கிளைகள், கட்டிட சாளரங்கள், மாடி உச்சி) என எல்லா இடத்திலும் மதியம் 12 மணி முதல் இடத்தைப் பிடித்து அமர்ந்து விடுவார்கள். மாலை 6-க்குப் பிறகு பக்தர்கள், சரணங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஜோதி தரிசனம் பார்த்ததும் பக்தர்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum