தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்றில் `கேஸ்' உண்டாவதற்கான அறிகுறிகள்

Go down

வயிற்றில் `கேஸ்' உண்டாவதற்கான அறிகுறிகள் Empty வயிற்றில் `கேஸ்' உண்டாவதற்கான அறிகுறிகள்

Post  meenu Sun Jan 27, 2013 4:37 pm


சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதோ அல்லது சாப்பிட்ட பிறகோ, ஒன்றிரண்டு முறை எப்போதாவது ஏப்பம் வருவது இயற்கையே. இந்த ஏப்பத்தின்போது கொஞ்சம் `கேஸ்' வாய் வழியாக வெளியே வந்து விடுகிறது. வயிற்றில் நிறைய சாப்பாடு இருந்தால், இந்த மாதிரி சாப்பிட்டவுடன் ஏப்பம் வரும். இதனால் தான் சிலர், "ஏப்பம் பெரிசா இருக்கே. பலத்த சாப்பாடு மாதிரி தெரியுது'' என்று கிண்டலாகக் கேட்பார்கள்.

அடிக்கடி ஏப்பம் விடுபவர்கள், காற்றை அதிகமாக வாய் வழியாக விழுங்குகிறார்கள் என்று அர்த்தம். இதில் ஒன்றும் தப்பில்லை. காற்று இரைப்பையை போய்ச் சேர்ந்தவுடன், இவர்களுக்கு ஏப்பம் வந்துவிடும். சீன நாட்டுப் பிரபலமான `ட்ராகன்' விலங்கின் வாய் வழியாக, நெருப்பும் புகையும் சேர்ந்து வெளியே வருவதுபோல், நிறைய திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது போலத்தான், சிலர் அதிக சத்தத்துடன், பார்க்கவே பயமாக இருக்கும் வகையில், வாய் வழியாக ஏப்பம் விடுவார்கள்.

இவர்கள் விடும் ஏப்பம், வீட்டில் இருப்பவர்களை பயமுறுத்துவதோடு மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்திலிருப்பவர்களையும் பயமுறுத்தும்படி இருக்கும். வயிற்றில் சேர்ந்துள்ள காற்றை, மறுபடியும் ஏப்பமாக சுத்தமாக வெளியேற்றி விட்டால், இந்த கேஸ் பிராப்ளம், அஜீரணம், அல்சர், வாய்வுக்கோளாறு முதலிய எதுவும் வராது என்று சிலர் நினைத்துக் கொள்வதுண்டு.

அதனால் ஏப்பம் வந்தால்தான் விடுதலை, நிம்மதி, திருப்தி கிடைக்கும் என்று எண்ணி கஷ்டப்பட்டு ஏப்பத்தை பெரிய சத்தத்துடன் வரவைத்து, "ஏவ், ஏவ்'' என்று நாலு ஊருக்குக் கேட்கிற மாதிரி, சிலபேர் ஏப்பம் விடுவார்கள். இவர்கள் சத்தம் போட்டு ஏப்பம் விடாவிட்டாலும், அது தானாகவே வெளியே வந்துவிடும். குடலில் கேஸ் அதிகமாக இருந்தால், சில பேருக்கு வயிற்றில் வலி ஏற்படும்.

வயிற்றின் இடது பக்கத்தில் வலி இருந்தால், அது கேஸினால் உள்ள வயிற்று வலியா அல்லது நெஞ்சு வலியா என்ற குழப்பம் ஏற்படும். அதே மாதிரி வயிற்றின் வலது பக்கத்தில் வலி இருந்தால், அது கேஸினால் உள்ள வயிற்று வலியா அல்லது பித்தப்பை மற்றும் அப்பென்டிசைட்டிஸ் வலியா என்ற குழப்பம் ஏற்படும். உங்கள் டாக்டரின் ஆலோசனையுடன், மருந்தை சாப்பிட்டு கேஸை வெளியேற்றுவது நல்லது. கேஸ் ஒருவருக்கு வயிற்றில் அதிகமாக இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? வயிற்றுவலி, திடீரென்று வயிறு பெரிசாக இருப்பது, அடிக்கடி ஏப்பம் விடுவது, ஆசனவாய் வழியாக அடிக்கடி கேஸ் போவது, இப்படி சில அறிகுறிகள் இருக்கும்.

இந்த அறிகுறிகள் எல்லாமே சேர்ந்து ஒருவருக்கு இல்லாவிட்டாலும், ஒருசில அறிகுறிகளாவது சிலருக்கு இருக்கும். கேஸ் பிராப்ளம் என்பதே ஒரு மிகப்பெரிய பிரச்சினை என்பதால், இந்த கேஸ் உண்டாவதற்கான காரணம் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் சாப்பாடு விஷயங்களை ஆராய வேண்டும். கேஸ் பிராப்ளம் ஏற்படுவதற்கு முன்பு என்னென்ன அயிட்டங்கள் சாப்பிட்டோம், என்னென்ன டிரிங்ஸ் குடித்தோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு வரவேண்டும்.

பின் கேஸ் பிரச்சினையினால், என்ன மாதிரி கஷ்டங்கள் உடலில் ஏற்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இதை வைத்தே, எந்த சாப்பாடு நமக்கு ஒத்துவரவில்லை என்று தெரிகிறதோ, அதை ஒதுக்கி விடலாம். ஏப்பம் மாதிரியே, ஆசன வாய் வழியாக `கேஸ்' போவதை, "பிளாட்டுலன்ஸ்'' என்று சொல்வதுண்டு. ஒரு நாளைக்கு சுமார் 14 தடவையிலிருந்து, சுமார் 23 தடவை, கேஸ் கீழே பிரிவது என்பது இயற்கையே. ஒரு நாளைக்கு, சுமார் ஒன்றிலிருந்து மூன்று `பைன்ட்' அளவு காற்று (கேஸ்), உடலைவிட்டு வெளியாகும். ஒரு பைன்ட் என்பது அரை லிட்டர் ஆகும். (ஒரு பைன்ட் 0.473 லிட்டர்).

கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவுப் பொருள்கள், வயிற்றில் சரியான முறையில், சரியான நேரத்தில் ஜீரணம் ஆகவில்லையென்றால், கேஸ் கீழே அதிகமாக பிரியத்தான் செய்யும். எனவே, நன்றாக, சரியாக ஜீரணம் ஆகாது என்று தெரிந்த உணவுப் பொருள்களை தயவு செய்து சாப்பிடாமல் தவிர்க்கப்பாருங்கள். மனிதர்களைப் போலவே, நம்மைச் சுற்றி வாழும் விலங்குகளாகிய ஆடு, மாடு, நாய் முதலியவைகளுக்கும் `கேஸ் பிராப்ளம்' உண்டு.

மனிதர்களைப் போலவே, காற்றை வாய் வழியாக விழுங்குவதன் மூலமே விலங்குகளுக்கு கேஸ் அதிகமாக சேருகிறது. இதற்கு முக்கிய காரணம், தனக்கு எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் அவை வேக வேகமாக சாப்பாட்டை விழுங்குவது தான். மனிதர்களுக்கு அதிகமாக வயிற்றுக் கோளாறும், அதனால் கேஸ் உண்டாவதற்கும் முக்கிய காரணம் மசாலா, காரசாரம் அதிகமுள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவது தான்.

சுலபமாக ஜீரணம் ஆகும் உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிடுங்கள். அதேமாதிரி கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை குறைவாகச் சாப்பிடுங்கள். சாப்பிட்டவுடனே ஜீரணம் ஆகும் உணவுப் பொருட்களை, முதலில் சாப்பிடுங்கள். அதற்குப் பிறகு லேட்டாக ஜீரணம் ஆகும் உணவுப் பொருட்களை, அடுத்ததாக சாப்பிடுங்கள். ரோட்டில் மெதுவாக செல்லும் கார் முன்னே சென்றால், பின்னால் வேகமாக வரும் கார்களை எல்லாம் போகவிடாமல், டிராபிக் ஜாம் ஏற்பட்டு, பயங்கர பிரச்சினை ஆகிவிடும்.

அதேமாதிரிதான் சாப்பாடும். ஈஸியாக ஜீரணம் ஆகும் உணவை முதலில் சாப்பிட்டால், அவை வேகமாக ஜீரணம் ஆகி, கீழே இறங்க ஆரம்பித்து விடும். அப்புறம் லேட்டாக ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட்டால், அது ஜீரணம் ஆக கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டு, மெதுவாக ஜீரணமாக ஆரம்பிக்கும். குளிர்ச்சியான பானங்கள் ஜீரணம் ஆவதை தாமதப்படுத்தும். மிதமான வெந்நீர், டீ முதலியவை ஜீரணத்தை அதிகப்படுத்தும். எனவே, பழச்சாறு முதலியவைகளை, முதலிலேயே குடித்து விடுங்கள்.

ஆவியில் வேகவைத்த அனேக உணவுப் பொருட்கள், எளிதில் ஜீரணமாகி விடும். (இட்லி, இடியாப்பம், ஆப்பம் முதலியவை) எண்ணெய் அதிகமாகச் சேர்த்து செய்யப்படும் உணவுப் பொருட்கள் ஜீரணமாக சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எண்ணெய் அதிகமாகச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவை, இரவில் லேட்டாகச் சாப்பிட்டு விட்டு, உடனே தூங்கப்போய்விட்டால், ஜீரணமாக அதிக கஷ்டப்பட வேண்டியதிருக்கும்.

மறுநாள் காலையில் நெஞ்சு கரிக்குது, நெஞ்சிலே சாப்பாடு நிக்குது, சரியாக ஜீரணம் ஆகலை என்றெல்லாம் குற்றச்சாட்டு வரும். பார்லி கஞ்சி ஜீரணம் ஆகும் நேரத்தை விட, அரிசி சாதம் ஜீரணம் ஆகும் நேரம் மிகக் குறைவே. சர்க்கரைப் பொருள் ஒரே தடவையில் ஜீரணம் ஆகி விடும். ஆனால் ஸ்டார்ச் பொருள் ஜீரணமாக அதிக நேரம் பிடிக்கும். பாலைவனத்தில் பட்டினியாகக் கிடந்தாலும், பச்சை அரிசியை, அப்படியே சாப்பிட முடியாது. வேக வைத்துத்தான் சாப்பிட முடியும். ஏனெனில் பச்சை அரிசியை ஜீரணம் செய்யக்கூடிய என்ஸைம்கள், நமது வயிற்றில் போதுமான அளவு இல்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum