தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மே 1 -ந் தேதி உலக ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம்

Go down

மே 1 -ந் தேதி உலக ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம் Empty மே 1 -ந் தேதி உலக ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம்

Post  meenu Sun Jan 27, 2013 4:36 pm


- ஒருவர் உடல் சோர்ந்து, நடை தளர்ந்து சோகத்தோடு வந்தால்...!
- இரவெல்லாம் தூக்கமில்லை இழுப்பு.
- குனிந்து சிறு பொருளைக்கூட எடுக்கமுடியவில்லை. அவ்வளவு கஷ்டம். - என் சட்டை பட்டனைக்கூட போட முடியவில்லை.
- மூச்சுக் குழாய் சிதறிவிடுவதுபோல் இருமுகிறேன்..

என்றெல்லாம் சொன்னால்..! அவர் முதிர்ந்த நிலை ஆஸ்துமாவால் அவதிப்படுவதாக கருதலாம். ஒரு நோயாளிக்கு அனுசரணையுடன் கூடிய கவனிப்பு, நோயை கட்டுப்படுத்துதல், நல்ல நிலையில் அதை பராமரித்தல், குணப்படுத்துதல் ஆகிய நான்கையும் டாக்டர்கள் வழங்க வேண்டும். அதைத்தான் ஒவ்வொரு நோயாளியும் டாக்டர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். மேலே சொன்ன அறிகுறிகளோடு வரும் முதிர்ந்த நிலை ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆஸ்துமாவை `சி.பி.ஓ.டி' என்று சுருக்கமாக அழைக்கிறோம். தொடக்கத்திலே அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால்- கண்டுகொண்டாலும் அலட்சியப்படுத்தினால்- சரியான, முறையான சிகிச் சையை பெறாவிட்டால்- முறையற்ற வாழ்க்கை முறை- முறையற்ற உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால் ஆஸ்துமா, முதிர்ந்த ஆஸ்துமாவாக மாறிவிடும். இது ஒரு சாதாரண நோயல்ல. உலகம் முழுவதும் வருடத்திற்கு 30 லட்சம் பேர் ஆஸ்துமாவால் மரணமடைகிறார்கள்.

இப்போதைக்கு உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்தியா, 2030-ல் உலகிலேயே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக மாறப்போகிறது. தற்போது முதிர்ந்த நிலை ஆஸ்துமாவிற்கு இந்தியாவில் வருடத்திற்கு 5 லட்சம் பேர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா வளரும் நாடு. இது போன்ற மரணங்கள் இந்தியாவில் வறுமையை அதிகரிக்கும்.

* இந்த அளவிற்கு ஆஸ்துமா பாதிப்பு உருவாக என்ன காரணம்?

புகைபிடித்தல்தான் முக்கிய காரணம் என்று மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி கூக்கா பயன்படுத்துதல், சில்லம் மெல்லுதல் போன்றவைகளும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. சிகரெட்டை விட பீடி அதிக ஆபத்து தருகிறது. பீடி புகையில் இருக்கும் நிகோடின் மூச்சுக்குழாயில் தார் மாதிரி படிந்து, அதனை சுருக்கிவிடும். அதனால் நெகிழ்வுதன்மை கொண்ட ரப்பர் போன்ற மூச்சுக்குழாய், இறுகி பிளாஸ்டிக் குழாய்போல் ஆகிவிடும்.

இப்போதும் கிராமங்களில் மண்எண்ணெய், மரக்கட்டை, சுள்ளி, மாட்டின் உலர்ந்த சாணம், சருகு போன்றவைகளை அடுப்பெரிக்க பயன்படுத்துகிறார்கள். அங்குள்ள சமையல் அறைகளில் பெரும்பாலும் காற்றோட்ட வசதியும் இருக்காது. அடுப்பில் இருந்து வெளியேறும் புகை, அப்படியே அங்கு தங்கும். சராசரியாக பெண்கள் தினமும் மூன்று மணி நேரத்தை இப்படிப்பட்ட சமையல் அறைகளில்தான் செலவிடுகிறார்கள். அந்த புகை அப்படியே அவர்களது மூச்சு குழாயைதாக்கி அதன் உள்சுவரை சேதப்படுத்துகிறது.

அதற்கு சரியான மருத்துவம் பெறாவிட்டால் முற்றி, முதிர்ந்த ஆஸ்துமாவாகும். தெருக் குப்பையை எரிப்பவர்கள், துணி பொருட்களை தைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள், ரசாயன தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள், வெல்டிங் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள், கிரானைட் அறுக்கும் தொழிலில் இருப்பவர்கள், பூப்பறிப்பதை நிரந்தர தொழிலாக கொண்டிருப்பவர்களையும் ஆஸ்துமா தாக்கலாம்.

இப்போது கொசுத்தொல்லை அதிகம். அதை விரட்ட விரும்பி பலர், கொசுவைவிட அதிக ஆபத்து நிறைந்த பொருளை பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்து தூங்குகிறார்கள். ஏராளமான வீடுகளில் தினமும் கொசுவர்த்தி சுருள் கொளுத்துகிறார்கள். ஒரு கொசு வர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகை, 100 சிகரெட் புகைக்கு சமம் என்ற கசப்பான உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

* முற்றிய ஆஸ்துமா, இதய நோயை உருவாக்குவது எப்படி?

நாள்பட்ட ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களில் 38 சதவீதம் பேருக்கு முதிர்ந்த நிலை ஆஸ்துமா உருவாகிறது. அந்த உச்சகட்ட பாதிப்பு நிலையை அவர்கள் அடையும்போது ரத்த அழுத்தத்தில் சீரற்ற நிலை உருவாகும். இதயம் பாதிக்கும். கிட்னி செயல்பாட்டில் நெருக்கடி உருவாகும். தசை சுருக்கம், எலும்பு அடர்த்தி குறைவு, சர்க்கரை நோய், மனநோய் போன்றவைகளும் தோன்றக்கூடும்.

முதிர்ந்த ஆஸ்துமாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஒருவரின் கழுத்தில் ரத்த குழாய் துடிப்பு அதிகமாக இருந்தால், அவர் இதயம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். முதிர்ந்த ஆஸ்துமா நோயாளியின் நுரையீரல் ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்படும். அதனால் ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்பிற்கு `பல்மனரி ஹைப்பர்டென்ஷன்' என்று பெயர்.

இந்த பாதிப்பு ஏற்படும்போது இதய துடிப்பு அதிகமாகி நாளடைவில் இதயம் மற்றும் நுரையீரல் செயல்திறன் குறையும். இதனால் மூச்சு இழுப்பு அதிகரிக்கும். கால்களில் நீர்கட்டும், கால்களில் வீக்கமும் காணப்படும். இந்த நோயாளிகள் முறையான சிகிச்சையை மேற் கொண்டால் நிம்மதியாக வாழ முடியும்.

* முதிர்ந்த ஆஸ்துமா நுரையீரலை எப்படி பாதிக்கிறது?

மூக்கு வழியாக சுவாசிக்கிறோம். அப்போது ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள், பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் மூச்சு குழாய்க்குள் செல்லும். அவைகளை வெள்ளை அணுக்கள் உடனே வந்து அழிக்கும். சராசரி மனிதர்களுக்கு இருக்கும் இந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி, ஆஸ்துமா நோயாளிகளுக்கு இருக்காது. அவர்களது வெள்ளை அணுக்களுக்கு நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி குறைவதோடு, அவை நோய்க்கிருமிகளின் அருகில் செல்லவும் தாமதமாகும்.

மூச்சுக்குழாய் உள்ளே செல்லும் கிருமிகளால் நீர் சுரந்து, உள் சுவர் சேதமாகும். அப்போது வெள்ளை அணுக்களுக்கும், ஒவ்வாமை பொருட்களுக்கும் போர் நடந்து, அவை எல்லாம் ஒன்றாக கலப்பதால் ஒருவித பிசின் போன்ற திரவம் உருவாகும். அதுதான் நம்மால் உணரப்படும் இறுகிய சளியாகும். இந்த சளி பிடித்துவிட்டால் மூச்சுக்காற்று உள்ளே செல்லவும், வெளியே வரவும் சிரமமாகும். மூச்சுக் குழாய் துவாரமும் சுருங்கும்.

இந்த நெருக்கடிகளால் கஷ்டப்பட்டு காற்றை வெளியேற்றும்போது அது இழுப்பாக மாறுகிறது. இந்த நெருக்கடி தொடரும்போது 5 லிட்டர் காற்று உள்ளே சென்றால், 3 லிட்டர் காற்று தான் சிரமப்பட்டு வெளியே வரும். அப்போது காற்று உள்ளே தேங்கி, மூச்சுக்குழாய் பெருத்துவிடும். இது `எம்பசிமா' என்ற நோயாகும். அப்போது உடலில் பல இடங்களில் காற்று தேங்கும். ரத்த குழாய்கள் பாதிக்கும். அந்த நிலையில் நோயாளிகள் பறவை போன்ற உடல் தோற்றத்திற்கு வந்துவிடுவார்கள்.

மார்பு தூக்கிய நிலையில் அகலமாகி விடும். இதனை `பேரல் செஸ்ட்' என்று கூறுவோம். இந்த முதிர்ந்த நிலை ஆஸ்துமா நோயாளிகளால் குளிக்க முடியாது. இரவில் படுத்து தூங்கமுடியாது. நாற்காலியில் அமர்ந்து மேஜையில் தலைசாய்த்து அரைகுறை தூக்கம் போடுவார்கள். கீழே இருக்கும் பொருளைக்கூட தூக்க முடியாத நிலைக்கு சென்றுவிடுவார்கள்.

* இத்தகைய நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

பழங்கள் சாப்பிடுவதும், தயிர் சாப்பிடுவதும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றதல்ல என்பது நான் கண்டறிந்த அனுபவ உண்மை. வெளிநாட்டில் இந்த நோயாளிகள் பழங்களை சாப்பிடுகிறார்கள். அவர்கள் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு அது ஏற்றதாக இருக்கலாம். ஆப்பிளில் `சல்ப்ஹைட்ரில்' என்ற நச்சும், வாழைப்பழத்தில் `சிரட்டானின்' என்ற நச்சும், திராட்சையில் `மெலட்ரானின்' என்ற நச்சும் உள்ளது. சாக்லேட்டில் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கும் ரசாயனமும் உள்ளது.

இவை மார்பு சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைகளை உருவாக்கும். ஆஸ்துமா ஒரு சாதாரண நோய். அதற்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் அது உங்களை கஷ்டப்படுத்தி, வாழ்க்கையை நஷ்டப் படுத்திவிடும். அதனால் முறையான சிகிச்சையை பெற்று ஆஸ்துமா முதிர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum