தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்போடு கொடுங்கள்

Go down

அன்போடு கொடுங்கள் Empty அன்போடு கொடுங்கள்

Post  birundha Sun Jan 27, 2013 12:44 pm

* எங்கு சென்றாலும் மகிழ்ச்சியைத் தருபவர்களே பண்பில் சிறந்தவர்கள். பண்பில்லாதவர்களோ ஓர் இடத்தை விட்டுச் சென்றபிறகே மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
* பார்க்க முடியாத கடவுளைக் காணும் வழி காணும் காட்சி எல்லாம் கடவுளின் வடிவாகக் காண்பதே ஆகும். இறைவன் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவனுடைய அருளே நம்மை வழிநடத்துகிறது.
* தினமும் நாம் செய்ய வேண்டிய கடமை தியானம் ஆகும். ஆபத்து வந்தவுடன் கூச்சல் போட்டு ஆண்டவனை அழைப்பது தியானம் அல்ல.
* உள்ளம் ஒரு நிறைவைக் காண விரும்பும்போது உடலின் துன்பத்தை நாம் பொருட்படுத்துவதில்லை. இதுவே வாழ்க்கையில் உயர்வு பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம்.
* நாளும் உண்மையாக வழிபாடு செய்தால் மனம் பக்குவம் அடையும். வாழ்க்கையும் சீர்படும். வாழ்வில் துன்பம் வந்தாலும் அதைச் சமாளிக்கும் நிதானத்தையும் ஆண்டவன் அருளால் உண்டாகும்.
* எளிய காணிக்கையையும் ஆண்டவன் மிக உயர்வாக ஏற்றுக்கொள்கிறார். எப்போது? அன்பு ததும்பும் உள்ளத்தோடு எதைக்கொடுத்தாலும் ஆண்டவன் அதை உவப்புடன் ஏற்று மகிழ்கிறார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum