தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதய நோயை தடுப்போம்: ஆரோக்கியமாக வாழ்வோம்

Go down

இதய நோயை தடுப்போம்: ஆரோக்கியமாக வாழ்வோம் Empty இதய நோயை தடுப்போம்: ஆரோக்கியமாக வாழ்வோம்

Post  meenu Sun Jan 27, 2013 12:24 pm



இதயம் ஒவ்வொரு மனிதன் உடலில் முக்கியமான உறுப்பு. உலகமே தூங்கும் போது இதயத்துக்கு தூக்கமே கிடையாது. நம் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஓய்வு உண்டு. ஆனால் இதயத்துக்கு மட்டும் ஓய்வு இல்லை. நாம் தூங்கினாலும் இதயம் தூங்காது. எல்லையில் ராணுவ வீரர்கள் இரவும்-பகலும் தூங்காமல் இருந்து நாட்டைக்காப்பது போல் நம்மை காப்பது இதயம்.

இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இதற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதியை உலகம் முழுவதும் இதய நாளாக கடைப் பிடிக்கப்படுகிறது. இந்நாளில் இதயத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள், பற்றியும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

இதய நோய் என்பது சமீப காலமாக மனித சமுதாயத்தை மிரட்டும் நோயாக மாறிவருகிறதாப இதய நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது பற்றி விளக்கம் தருகிறார் பிரபல இருதய நோய் நிபுணர் டாக்டர்.எஸ். தணிகாசலம். செப்டம்பர் 29-ந் தேதி உலகம் முழுவதும் இதய நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு குடிமகனும் இதயத்திற்கு என்று ஒரு நாளை ஒதுக்கி அந்த நாளில் இதயத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்.இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதை நினைவில் கொள்ள வேண்டும், இதன் மூலம் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டும். இந்த உணர்வு மக்களிடையே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வருடாவருடம் இதய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ``எஞ்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பார்கள். ஆனால் இக்கால கட்டத்தில் எஞ்சாண் உடம்புக்கு மூடிய கை அளவு இதயம் தான் பிரதானம். எப்படி ஒரு செடிக்கு தண்ணீர் அவசியமாகிறதோ, அதுபோல் நம் உடலில் உள்ள பல்லாயிரம் கோடி திசுக்கள் வளர அவை நன்கு செயல்பட, அழிந்த திசுக்கள் புதிய திசுக்களாக உருவாக ரத்தம் அவசியம்.

இந்த ரத்தம் தான் நம் உடல் உறுப்புகளுக்கு வேண்டிய சத்துக்களையும், பிராண வாயு மற்றும் ஊட்டச் சத்துக்களையும் எடுத்துச்சென்று ஒவ்வொரு திசுவையும் சென்றடைய செய்கிறது. இவ்வாறு செயல்படும் ரத்தத்தை ஒரு விசையோடு, ஒருங்கிணைத்து உச்சி முதல் வயிறு, பாதம் வரை உள்ள திசுக்களுக்கு அனுப்புகிறது.

அந்த திசுக்களில் உள்ள கழிவு பொருட்களையும், கரியமிலவாயுவையும் கிரகித்துக் கொண்டு தனது வலது அறைக்கு கொண்டு வந்து பிறகு அங்கிருந்து ரத்தத்தை நுரையீரலுக்குள் செலுத்தி சுத்தப்படுத்துகிறது. சுத்தப்படுத்தப்பட்ட ரத்தத்தை மீண்டும் தனது இடது அறைக்கு கொண்டு வந்து இடது கீழ் அறையில் இருந்து சுத்தமான ரத்தத்தை மகாதமணி மூலம் அதன் கிளைகள் வழியாக திசுக்களை அடையச் செய்கிறது.

இதயம், ஒரு குழந்தை பிறக்கும் முன்பே, கருப்பையில் இருக்கும் போதே 3 மாதத்துக்கும் குறைவான சிசுவாக இருக்கும் போதே துடிக்க ஆரம்பித்து விடுகிறது. பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, மாண்டு போகும் வரை தன்னல மற்ற ஒரு தியாகியாக, ஒரு உண்மையான சேவகனாக இதயம் செயல்படுகிறது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த அந்த உறுப்பை நாம் செவ்வனே காப்பது கடமை அல்லவாப எப்படி காப்பது என்ற வினா உங்களுக்கு தோன்றக்கூடும். 1947-ல் நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் ஒரு மனிதனின் வாழ்நாள் காலம் சராசரியாக 40 வயதுக்கும் கீழாக இருந்தது. இன்று இந்த நிலை மாறிவிட்டது. இன்று ஒரு குழந்தை இந்தியாவில் எங்காவது பிறந்தால் அதற்கு போதுமான ஊட்டச்சத்து, கல்விஅறிவு, வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கிறது.

67 வயது வரை வாழலாம் என்று திட்டமிட்டு சொல்ல முடியும். நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து தொழில் துறையில் கல்வித்துறையில் வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி என்று பல துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தனி மனிதனின் வருமானம் படிப்படியாக முன்னேறி வந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறி என்று நீங்கள் கேட்கலாம். ஆம் நல்ல அறிகுறிதான்.

நாடு வளர்கிறது. மக்கள் பலன் அடைக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இவ்வாறு நாடு பரிணாமம் அடைந்து கொண்டு வரும் போது நம்வாழ்வு முறை மாறி விடுகிறது. உணவு பழக்கம் மாறி விடுகிறது. மன அழுத்தம், அமைதி இன்மை என்ற கோளாறுகளுக்கு ஆளாகிறோம். அதனால் என்ன என்ற கேள்வி எழும். நாம் இன்றுள்ள நிலையில் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மக்கள் தொகையில் 40 விழுக்காடு இருக்கிறார்கள.

பள்ளிக் குழந்தைகள் முதல் முதியவர் வரை உடற்பயிற்சியில் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்கள். அதிகமான கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்கிறார்கள். இதனால் உடல் பருமன், ரத்த அழுத்தம் வரவும் சர்க்கரை நோய் வரவும் காரணமாகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு சத்துக்கள் நிறைந்து மாரடைப்பு நோய், பக்கவாதம், கால்களுக்கு போதுமான ரத்தம் செல்லாத நிலைகள் பார்வை இழப்பு போன்றவைகளுக்கு ஆளாகிறார்கள்.

நாடு முன்னேறி வந்தாலும் கை நிறைய பணம் இருந்தாலும் உடல் ஆரோக்கிய மற்ற நிலையை நோக்கி நகர்கிறது. ஒருவர் தன் முதுமை காலத்தில் ஆரோக்கியம் என்ற வார்த்தையைத்தான் எதிர் பார்ப்பார், மேற் சொன்ன காரணங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை அவருக்கு இல்லாமல் போகிறது. ஒவ்வொரு கோளாறுக்கும் ஒரு மருத்துவரை போய் பார்க்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இவ்வாறு நிகழாமல் இருக்க என்னதான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

இதை தவிர்க்க சில வழிமுறைகள்:-

* அவசர நிலையை தவிர்க்க வேண்டும்

* சினத்தை கட்டுப்படுத்த வேண்டும்

* திறனுக்கேற்ற தொழிலில் ஈடுபட வேண்டும்.

* அன்றாடம் எளிய உடற் பயிற்சி செய்ய வேண்டும்.

* உணவு கட்டுப்பாடு தேவை.

* அடர்த்தி வாய்ந்த கொழுப்பு சத்துமிக்க உணவு களை தவிர்க்க வேண்டும்.

* வருடம் ஒருமுறை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, கொழுப்பு சத்தின் அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கண் காணிக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றோ, பலதோ வேறுபட்டு இருந்தால் மருத்துவரை அணுகி அவர் சொன்னபடி மருந்துகள் எடுத்துக்கொண்டு பயனடைய வேண்டும்.

நாம் செய்யும் தவறுகளை நாமே உணர்ந்து மீள வேண்டும். மற்றவர்கள் செய்யும் தவறை அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் மீள உதவி செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது வருடாவருடம் செய்யும் காரியம் அல்ல. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய காரியம். வருடாவருடம் செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நாம் செய்ய வேண்டிய காரியத்தை அனுகுமுறையை இந்நாள் ஞாபகப்படுத்தி விட்டுச் செல்கிறது.

நாம் முதலிலேயே விழிப்புடன் இருந்து, உடலில் உள்ள குறைபாடுகளை கண்டறிய வேண்டும். அவ்வாறு செயல்பட தவறி இருப்பின், பின்னர் பல நுண்ணிய ஆய்வுகளினால் ரத்த நாள நோய்களாக கண்டறியப்பட்டால், அது வயதாகி புதிய பரிணாமம் எடுப்பதற்கு முன் அதன் தன்மையை நாம் ஆய்வுகளுக்கு உட்படுத்தி அதற்கான பிரத்யேகமான சிகிச்சைகளை மருத்துவர் உதவியுடன் செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்து கொண்டோமேயானால் வியாதி வந்து திசுக்கள் மடிவதற்கு முன் நாம் காப்பாற்றப்படுகிறோம். இது தவிர குழந்தை பருவத்தில் உண்டாகும் சில வியாதிகள் உண்டு. இதில் சில, பாரம்பரியமாக வரக்கூடியது; சில உறவு முறை திருமணத்தில் வரக்கூடியது, கர்ப்ப காலத்தில் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நச்சு மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படக்கூடியது என்று பல உண்டு.

இது மட்டுமின்றி வயது முதிர்ந்த நிலையில் கர்ப்பம் தரிப்பதை தவிர்க்க வேண்டும். சமுதாயத்தில் நடுத்தட்டில் உள்ளவர்கள் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவு உண்பதில்லை. ஊட்டச்சத்து இல்லாத உணவை உண்ணும் குழந்தைகளிடம் சாதாரணமாக தொண்டை கரகரப்பும் ஜ×ரமும், ஏதாவது சாப்பிட்டால் தொண்டையில் வலி ஏற்படுவதும் உண்டு. பலருக்கு இது மருந்து எடுக்காமலேயே குணமாகி விடும்.

தொண்டை வலி, காய்ச்சலில் இருந்து மீண்ட பிறகு சிலருக்கு ஒரு வாரம் கழித்து மூட்டுக்களில் வலியும், வலியுடன் கூடிய வீக்கமும், ஒரு மூட்டில் இருந்து இன்னொரு மூட்டுக்கு வலி பரவி குழந்தையை நடக்க முடியாமல் செய்து படுக்கையில் கிடத்தி விடுகிறது. இவ்வாறு உண்டாகும் மூட்டு வலி தானாகவே சரியாகி விடுகிறது. அதில் மூன்றில் ஒருவருக்கு அவ்வாறு பாதிக்கப்பட்ட பின்பு இதயம் தாக்கப்படுகிறது.

அதன் 3 சுவர்களும் தாக்கப்படுகிறது. இதயத்தின் வால்வுகள் சுருங்குவது அல்லது பழுதடைந்து செயல்திறனை இழப்பது போன்ற மாறுதல்களால் அச்சிறுவனோ, சிறுமியோ தங்களது இளைய பருவத்தை அடையும் போது இதயத் தாக்கத்தினால் எனக்கு தொண்டை வலிக்கிறது என்று கூறுவார்களேயானால் உடனே அருகில் உள்ள மருத்துவ மனைக்கோ, மருத்துவரையோ அனுகி பென்சிலின் மருந்தை 10 நாள் கொடுப்போமேயானால் வியாதியின் கொடுமையில் இருந்து முழுமையாக மீள முடியும்.

இந்த நாளில் நீங்கள் ஒரு சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். யாராவது ஒருவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருப்பதை கண்டால் அதனால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஏற்படும் பயன்களை எடுத்துச் சொல்ல வேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதன் பயன், கொழுப்பு சத்துக்கள் ரத்தத்தில் அதிகம் ஆகாமல் இருக்கும் படி ஆலோசனை சொல்ல வேண்டும்.

இந்த ஆலோசனைகளை ஒரு நாளைக்கு ஒருவருக்கு சொல்வேன் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த இதய நாள் வரும் முன் 365 பேருக்கு எடுத்துரைப்பேன் என்ற சபதத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால் அது தான் சிறந்தது. இதுவே நாட்டிற்கும், உங்களுக்கும், உங்கள் வீட்டுக்கும், நீங்கள் செய்யும் மகத்தான பணி. என் கருத்தினை நான் பகிர்ந்து கொள்ளும் இந்த வேளையில் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

நம் நாடு இன்றைய நிலை யில் ஆரோக்கியமான பொருளாதார நிலையில் இல்லை. ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான நிலையில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை தன் செயல்பாடுகளால் உயர்த்த வேண்டும். வியாதியால் மனிதன் தனக்கே எதிரியாக மாறும்போது மனித திறன் நாட்டுக்கு கிடைக்காமல் போகிறது.

வியாதியுள்ள மக்களுக்கு போதுமான தகுந்த சிகிச்சை அளிப்பதில் அரசாங்கத்தின் செயல்பாடு தேவை. அதற்கு மிகுந்த செலவும் ஆகிறது. ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியால் அவதிப்படும் நம் நாடு இதனை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும். எனவே இதை நாம் நன்கு உணர்ந்து வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும் தீமைகளில் இருந்து நலமுடன் வாழ பிரார்த்தனை செய்து கொள்வோம்.

இதயத்தை பாதுகாக்க உணவு`டிப்ஸ்'.......

இருதய அடைப்பு, பக்கவாதம் மற்றும் பெருந்தமனித் தடிப்பை தவிர்க்க மருத்துவ உணவு முறை கோட்பாடு.

* நம் உணவில் கலோரி என்பது மூன்றுவகை சத்துக்களில் இருந்து வருகிறது. அதில் 65 சதவீதம் மாவுச்சத்து, 20 சதவீதம் கொழுப்புச்சத்து மற்றும் 15 சதவீதம் புரதசத்து.

* கலவை மாவுச்சத்து நிறைந்த தாணியம், புரதச்சத்து நிறைந்த பயிர் வகைகள், கொழுப்பு நீக்கிய பால் வகைகள், கொழுப்பற்ற இறைச்சி.

* மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து இவை இரண்டின் அளவு உணவில் மீறினால் உடல் எடை அதிகரிக்க கூடும். எடை குறைக்க வேண்டும் என்றால் அதிக அளவில் புரதசத்து (20 சதவீதம்), குறைந்த அளவு மாவுச்சத்து (60 சதவீதம்) கொழுப்பு சத்து 15 சதவீதம் மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

* மின்னரல், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்களான மாம்பழம், பலாப்பழம், சீத்தாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்றவை மாவுச்சத்து மிக அதிகம் என்பதால் உடல் எடை அதிகரிக்க கூடும். இதேபோன்று கிழங்கு வகைகளான உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவைகளும் மிக அதிகம் என்பதால் உடல் பருமன் உள்ளவர்கள் இவற்றை தவிர்க்கவும்.

* சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு ஒருவேளை சாதம், மற்றொரு வேளை இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால்ட உடல் பருமன் உள்ளவர்கள் ஒருவேளை மட்டுமே சாதம் அல்லது அரிசி சார்ந்த உணவு (இட்லி, தோசை, இடியாப்பம் 2-3 எண்) எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு நாளைக்கு 2-3 தேக்கரண்டி அளவு எண்ணை சேர்த்துக் கொள்ளவும்.

* சூரியகாந்தி எண்ணை, சோளம் எண்ணை, எள் எண்ணை, அரிசி தவிடு எண்ணை, ஆலிவ் எண்ணை, கடலை எண்ணை, இவ்வகை எண்ணைகளில் மாற்றி மாற்றி ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தவும்.

* ஒருவர் உடல் எடை குறைக்க அல்லது பொருத்தமான உடல் எடையை பாதுகாக்க ஒரு நாளைக்கு 40-60 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்தல் அவசியம். நடத்தல், ஓடுதல், நீச்சல் போன்ற செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum