தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பகுத்தறிவுத் தந்தை பெரியார், பேராசிரியர் பார்வையில் தொகுப்பு

Go down

பகுத்தறிவுத் தந்தை பெரியார், பேராசிரியர் பார்வையில் தொகுப்பு Empty பகுத்தறிவுத் தந்தை பெரியார், பேராசிரியர் பார்வையில் தொகுப்பு

Post  oviya Sun May 26, 2013 5:19 pm

விலைரூ.250
ஆசிரியர் : ந.க. மங்கள முருகேசன்
வெளியீடு: தென்றல் பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 480
"உயிர், மெய், உயிர்மெய், சார்பு என, எழுத்தியலிலும், "வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என, பாட்டியலிலும், நூல் வகை ஜாதியை, நாட்டிய ஆரியத்துக்கு முதல்தாம்பூலமா, "தமிழா கேள் என, முழங்கிய பேராசிரியர், பெரியாரை பற்றி, "விழிப்படையச் செய்த வித்தகர், நம்மை நாமாக உணரச் செய்தவர், எதிர் நீச்சல் வீரர் இப்படி, 34 கட்டுரைகள், பேராசிரியர் நடத்திய புதுவாழ்வு மாத இதழில், வெளியான தலையங்கங்கள், நேர்காணல்கள், போன்றவை மூலம், பெரியாரின் ஒட்டுமொத்த கருத்துக்களை, ஆதாரங்களுடன் விளக்கும் நூல்.
"கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலையெனக் கொண்டாடும், கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்னும் வள்ளலார் வாக்கினைப் புரிந்து கொள்ளவும் இயலாதவன் (தமிழன்) (பக்:152). "பாரதியாரின் புதுமைக் கொள்கையை வலியுறுத்தும் வண்ணமே, பெரியாரின் பகுத்தறிவு வாதம் நடைபெறுகிறது (பக்:159) என்னும் பேராசிரியர், "நாளைப் பற்றியும், கோளைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த ஓர் இனம், இப்போது, முற்போக்காகச் சிந்திக்க முற்பட்டதென்றால், அது தந்தை பெரியாரின், சீரிர சிந்தனையின் விளைவுதான்; பணியின் பயன்தான் (பக்:253)."வருங்காலம், வழிவரும் பழமைக்கும்சொந்தமல்ல, புத்தறிவு தரும் பகுத்தறிவுக்கே சொந்தம்! (பக்:126) என, உறுதியாகக் கூறுகிறார்.
"இருப்பது எதுவும் ஒருவன் இல்லை என்பதால், மறைந்துவிடாது இல்லாதது எதுவும் ஒருவன் உண்டு என்பதால், முளைத்து விடாது. எனவே, சிந்தித்து, உங்கள் பகுத்தறிவுக்குச் சரி என்று படுகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள் (பக்:145) என்னும் பெரியாரின் கருத்துக்கு, "கடவுள் என்பது உண்டு, இல்லை என்ற இரண்டு எல்லைக்கும் அப்பாற்பட்டு, கடவுள் கொள்கைக்கு மிகவும் மேம்பட்ட, ஆதி சங்கராச்சாரியார் கூட, அகம்பிரம்மம் என்ற தத்துவத்தைச் சொன்னபோது, கடவுள் மனித வடிவில் இல்லை (பக்:455) என, விளக்கம் கூறியுள்ளார்.
"பெரியார் ஒரு லேபிள். அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கருதுபவர்கள் தான் பல பேர். அதற்குமேல், அவரைப் பற்றி, ஆழ்ந்து சிந்தித்தவர்களும் அல்ல (453) அதனால் தான், "இன்று, தமிழ்மொழி வழிபட்ட அடையாளம் ஒன்றைத் தவிர, வேறு அடையாளங்களை வெளிப்படையாக காணமுடியாத நிலையில், தமிழ் மக்கள் உருக்குலைந்துள்ளனர். (பக்;150) என்று ஆதங்கப்படும், பேராசிரியரின் உணர்வு பொருள் பொதிந்தது. பெரியார் பற்றிய போராசிரியரின் இன, மொழிச் சிந்தனைகளைத், திராவிட வரலாறும், இழையோடும் வகையில், தொகுத்திருப்பது அருமை.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum