தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொடைக்கானலில் கோடை விழா தொடங்கியது

Go down

கொடைக்கானலில் கோடை விழா தொடங்கியது  Empty கொடைக்கானலில் கோடை விழா தொடங்கியது

Post  ishwarya Fri May 24, 2013 2:50 pm

கொடைக்கானலில் கோடை விழா தொடங்கியது  Kodikanal
குளுகுளு சீசனின் உச்சகட்டமான கோடை விழா, கொடைக்கானலில் மலர்
கண்காட்சியுடன் நேற்று துவங்கியது. ‘மலைகளின் இளவரசி‘ கொடைக்கானலில் இந்த
ஆண்டு கோடை சீசன் முன்னதாகவே தொடங்கியது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்
பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனைக் கொண்டாட வரும் சுற்றுலாப்
பயணிகளை குஷிப்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா
நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று காலை தொடங்கியது. இம்மாதம் 28ம் தேதி வரை
விழா நடக்கும். கோடைவிழாவின் தொடக்கமாக பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத்
துறையால் 52வது மலர் கண்காட்சி இரண்டு நாள் நடத்தப்படுகிறது. நேற்று துவங்
கிய மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. பிரையண்ட் பூங்காவில்
திரும்பும் திசையெல்லாம் பல வண்ண ரகங்களில் சால்வியா, ஆன்ட்ரைனம்,
கொரியாப்சிஸ், பேன்சி, டேஸி, டெல்பீனியம் உள்ளிட்ட பத்தாயிரத்துக்கும்
அதிகமான பல வண்ணப் பூச்செடிகளில், சுமார் 50 லட்சம் வண்ண மலர்கள் பூத்துக்
குலுங்குகின்றன.

இந்த ஆண்டு சிறப்பம்சமாக காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட தாஜ்மகால், தேசியக்
கொடியின் வண்ணங்களைக் கொண்ட மலர் படுக்கை, பலவகை மலர் செடிகளைக் கொண்டு
அமைக்கப்பட்டுள்ள நட்சத்திரப் படுக்கை, வானவில் நிறம் கொண்ட மலர் படுக்கை
ஆகியவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தன. மலர் கண்காட்சியைப்
பார்ப்பதற்காக, பிரையண்ட் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள்
திரண்டனர். கோடை சீசன், அதன் உச்சக்கட்டத்தில் இருப்பதால், கொடைக்கானல்
நகரில் திரும்பும் திசையெல்லாம் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum