தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமலையில் ரத சப்தமி விழா : மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம்

Go down

  திருமலையில் ரத சப்தமி விழா : மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம் Empty திருமலையில் ரத சப்தமி விழா : மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம்

Post  ishwarya Fri May 24, 2013 12:16 pm

திருமலை: ரத சப்தமி விழாவையொட்டி திருமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரம்மோற்சவத்தின் 9 நாட்களில் உற்சவர் நான்கு மாட
வீதிகளில் பவனி வருவதை காண முடியாதவர்கள், ரத சப்தமி ஒரே நாளன்று அனைத்து வாகனங்களிலும் வலம் வந்த மலையப்ப சுவாமியை நேற்று கண்டு தரிசித்தனர். திருமலை ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்தார். அங்கிருந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் வைர கிரீடம் பொருத்தப்பட்டு சிவப்பு பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிந்து சூரிய உதயத்துக்கு முன்னதாக கோயில் எதிரே வந்தார்.

பின்னர், சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்ட பிறகு நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி மேளதாளம் முழங்க பவனி வந்தார். இதையடுத்து, காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகவும், 12 மணிக்கு கருட வாகனத்திலும் மலையப்பர் உலா வந்தார். பிற்பகல் 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 3 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடந்தது. 4 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி வலம் வந்து அருள் பாலித்தார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum