தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஷ்டமி திதியில் பரிகார வழிபாடு.......

Go down

அஷ்டமி திதியில் பரிகார வழிபாடு....... Empty அஷ்டமி திதியில் பரிகார வழிபாடு.......

Post  ishwarya Thu May 23, 2013 6:11 pm



அஷ்டமி திதியில் பரிகார வழிபாடு.......மரணத்திற்கு அஞ்சி வாழ்வோர், கடுமையான நோய்க்கு ஆட்பட்டோர், இருதய நோயால் அவதியுறுவோர் காலன் நேரத்தில் ஊட்டத்தூர் ஸ்ரீ பைரவருக்கு சந்தன காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களை பதித்து ஸ்ரீகாலாஷ்டகத்தை ஓதியும், கால பைரவருக்குப் பிரீதியான முழு முயற்சியால் அர்ச்சித்தும், முழு முந்திரி கலந்த உணவை தானம் அளித்தும் மேற்கண்ட குறைகளுக்கு தக்க நிவர்த்தி பெறலாம்.

பொதுவாக அடிக்கடி இரவு நேர பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள், இரவு நேரத்தில் அலுவலக பணி புரிபவர்கள் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவரை அடிக்கடி தரிசித்து வர வேண்டும்.

ஏனென்றால் இரவில் தீய சக்திகள் பெருக்கெடுப்பதாலும் அவற்றில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ளும் புண்ய சக்தியை பெற்றிருப்போர் ஒரு சிலரே என்பதாலும் ஸ்ரீகால பைரவருக்கு உரித்தான அஷ்டமி திதியில் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவருக்கு ஆராதனை செய்து வழிபடுதலால் இரவு நேரத்தில் ஏற்படும் கஷ்டங்கள், விபத்துகளில் இருந்து தம்மை தற்காத்து கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum