தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உண்மையான மன அமைதி!

Go down

 உண்மையான மன அமைதி! Empty உண்மையான மன அமைதி!

Post  ishwarya Thu May 23, 2013 6:03 pm

நீரின்றி பயிர் இல்லை, நம்பிக்கை இன்றி வாழ்வில்லை. நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையால்தான் நாமும், உலகமும் இன்று வரை பிழைத்திருக்கிறோம்.

இறை நம்பிக்கையோ ஒரு படி மேலானது. கண்ணால் காண முடியாத பரம் பொருளான இறைவன் இப்பூமியில் வாழும் மானிடரான நமக்குத் தேவையான அனைத்தையும் தேவையான நேரத்தில், தேவையான அளவில் நிறைவேற்றித் தருவார் என்று உள்ளார்ந்த அசைக்க முடியாத பற்றுறுதி கொண்டிருப்பதே இறை நம்பிக்கை. பைபிளில் இதனை நிரூபித்துக் காட்டும் எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன.

பன்னிரு ஆண்டுகளாக கடுமையான இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண், இயேசு மக்கள் மத்தியில் இருக்கும் பொழுது கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். அவர் தமக்குள், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும்; நலம் பெறுவேன்' எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவளைத் திரும்பிப் பார்த்து, "மகளே துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று (9:20 மத்தேயு)'' என்றார்.

இயேசு ஆண்டவரின் மேல் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையால் அவரது ஆடையைத் தொட்ட நிமிடத்திலேயே குணமடைந்தாள் கொடிய நோயால் வருந்திக்கொண்டிருந்த அப்பெண். ஆம், இறைவன்பால் ஒருவன் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தால் மனித சக்தியால் முடியாத காரியங்கள் அனைத்தும் சுலபமாக நடைபெறும்.

""உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து "இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ' என்று கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று இயேசு தம் சீடர்களிடம் கூறினார் (17:20 மத்தேயு)''.

இன்று நாம் வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்களில் இறை நம்பிக்கையின் மகத்தான சக்தியைக் கண்கூடாகக் காண்கிறோம்.

மனிதர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் அற்புதமாகக் குணமடைகிறார்கள். நவீன மருத்துவ சிகிச்சைகள் பயனளிக்காத தருணங்களில் தம்பதியர் குழந்தைப் பேறு பெறுகின்றனர். நூற்றுக் கணக்கான புதுமைகள் ஆற்றுப் பெருக்கினைப் போல் தினமும் நடைபெறுவதைக் காண்கிறோம்.

இவை எல்லாம் எப்படி சாத்தியமாகிறது? இறைவன் மீதும், இறையன்னை மீதும் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை வழியாகத்தான். "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர் (11:25 யோவான்)'' என்ற இயேசுவின் கூற்றில் நம்பிக்கை வைக்கும் அனைவரும் உண்மையான மன அமைதியும், ஆறுதலும், மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வர் என்பதில் சந்தேகமே இல்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum