தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போலி திருமண பரிகாரம்

Go down

போலி திருமண பரிகாரம்  Empty போலி திருமண பரிகாரம்

Post  ishwarya Wed May 22, 2013 5:30 pm

செவ்வாய் தோஷத்தை விரட்ட, போலியாக ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாழைக் கன்று, தர்ப்பை புல், நவ தான்யம், மஞ்சள் குங்குமம், பாக்கு வெற்றிலை, பூ-பழம்- தாலிக் கயிறு, இரு மாலைகள் இவற்றைக்கொண்டு உண்மையில் திருமணம் செய்விப்பது போல் திருமணம் செய்விக்க வேண்டும்.

தாலியை பல பேரிடம் ஆசி வாங்கி வாழை மரத்திற்குக் கட்ட வேண்டும். வாழை மரத்திற்கு மாலை அணிவித்து மூன்று முறை மாலை மாற்றிக்கொண்டு பிறகு நவதான்யம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பிறகு 5 நிமிடம் கழித்து ஒரு அரிவாளால் மணமகளைக் கொண்டு அவ்வாழைக் கன்றை எட்டு துண்டுகளாக்கி நீர்நிலையில் எறிந்துவிட வேண்டும்.

இப்படி செய்யும் நாள் ஒரு திருமண நாளாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் திருமணம் கூடும். சீர்காழிக்கு அருகில் உள்ள வைத் தீஸ்வரன் கோவிலில் இருக்கும் நவக் கிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு இளம் சிவப்பு நிற துணியை அணி வித்து சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வரவேண்டும். இவ்வாறு 9 செவ்வாய்க் கிழமைகளில் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum