நடப்பதும் மருத்துவம்தான்
Page 1 of 1
நடப்பதும் மருத்துவம்தான்
இன்றைய காலகட்டத்துல பல பேர் உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று, தங்களுடைய உடலை கட்டுக்கோப்பா வைத்திருக்க முயற்சி செய்றார்கள். ஆனால், செலவில்லாத, சிரமமில்லாத எளிய உடற்பயிற்சி எது தெரியுமா? நடக்குறது தான் என்கின்றனர் மருத்துவர்கள். நடையானது உடலை மட்டுமல்ல, மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறது, அதன் செயல்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
நாம் பிறந்த ஒரு வருடத்தில் தொடங்கிற நடை பயணம் வாழ்நாளின் இறுதிவரை தொடர்கின்றது. எனவே, மற்ற உடற்பயிற்சிகளைச் செய்கிறோமோ... இல்லையோ, தினசரி நடைப்பயிற்சி செய்தாலே பல நோய்கள் அண்டுவது தடைபட்டுப்போகும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, 10 நிமிடங்கள் நடக்குறது, அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுறதுக்கு ஈடாகுமாம். ஆனால், நாம் நினைத்தவாறெல்லாம் நடக்கக் கூடாது. அதற்கென்று ஒரு வரைமுறை உண்டு.
நடக்கும் போது தரையைப் பார்க்காமல், நேரா நிமிர்ந்து பார்த்து நடக்கவேண்டும். உடைகள் இறுக்கிப் பிடிக்கவும் கூடாது. அதேசமயம் மிகவும் தளர்வாகவும் இருக்கக் கூடாது. புதுசா நடக்க ஆரம்பிக்குறவங்க, நடைப்பயிற்சிக்கு இடையே சிறிது ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. சாப்பிட்ட 2 அல்லது 3 மணி நேரத்திற்குப் பிறகே நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல நடைப்பயிற்சி செய்த அரைமணி நேரத்திற்குப் பிறகே திரவ அல்லது திட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை நேரத்துல மிதமான சூரிய ஒளியில நடக்கும்போது, உடலுக்குத் தேவையான ‘விற்றமின் டி’யும் கூடுதலாகக்கிடைக்கிறது.
நாம் பிறந்த ஒரு வருடத்தில் தொடங்கிற நடை பயணம் வாழ்நாளின் இறுதிவரை தொடர்கின்றது. எனவே, மற்ற உடற்பயிற்சிகளைச் செய்கிறோமோ... இல்லையோ, தினசரி நடைப்பயிற்சி செய்தாலே பல நோய்கள் அண்டுவது தடைபட்டுப்போகும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, 10 நிமிடங்கள் நடக்குறது, அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுறதுக்கு ஈடாகுமாம். ஆனால், நாம் நினைத்தவாறெல்லாம் நடக்கக் கூடாது. அதற்கென்று ஒரு வரைமுறை உண்டு.
நடக்கும் போது தரையைப் பார்க்காமல், நேரா நிமிர்ந்து பார்த்து நடக்கவேண்டும். உடைகள் இறுக்கிப் பிடிக்கவும் கூடாது. அதேசமயம் மிகவும் தளர்வாகவும் இருக்கக் கூடாது. புதுசா நடக்க ஆரம்பிக்குறவங்க, நடைப்பயிற்சிக்கு இடையே சிறிது ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. சாப்பிட்ட 2 அல்லது 3 மணி நேரத்திற்குப் பிறகே நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல நடைப்பயிற்சி செய்த அரைமணி நேரத்திற்குப் பிறகே திரவ அல்லது திட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை நேரத்துல மிதமான சூரிய ஒளியில நடக்கும்போது, உடலுக்குத் தேவையான ‘விற்றமின் டி’யும் கூடுதலாகக்கிடைக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum