தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொங்கல் கரும்பு - ஒரு சுவையான வரலாறு

Go down

பொங்கல் கரும்பு - ஒரு சுவையான வரலாறு Empty பொங்கல் கரும்பு - ஒரு சுவையான வரலாறு

Post  ishwarya Wed May 22, 2013 11:37 am

கரும்பு தின்ன கூலியும் வேண்டுமா?’ என்று சொல்வார்கள். கரும்பு என்றாலே தைப்பொங்கல் தான் நம் நினைவுக்கு வரும். கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று சொல்வார்கள். அதனால்தான், தைப்பொங்கல் அன்று கரும்பை முக்கிய உணவாக வைத்து கொண்டாடுகின்றனர். தமிழர்களின் பண்பாட்டில் ஒரு அங்கம் பெற்றுவிட்ட கரும்பு, அதியமானின் முன்னோரால் கொண்டு வரப்பட்டது என்றார், ஒளவையார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கரும்பை விரும்பிச் சாப்பிடுவர். இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கரும்பு பற்றிய சுவையான தகவல்கள் பல உள்ளன. பொங்கல் நாளில் அவற்றில் சிலதை இங்கு பார்ப்போம்.

இது ஒரு புல் வகைத் தாவரம். இது நீண்ட தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாகவும் வளர்கிறது. நெல் பயிரைப் போன்றே கரும்பும் நன்செய் வகை பயிரைச் சேர்ந்தது. இது 12 மாதங்களில் விளையும். வண்டல் மண், கரிசல் மண் பூமியிலும் வளரும். வெப்பம் அதிகம் இருந்தால், கரும்பின் தரம் உயரும்.

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. கி.மு. 500ம் ஆண்டில் இந்தியாவில் கரும்பில் இருந்து சீனி தயாரிக்க ஆரம்பித்தனர். இது கி.மு.100ம் ஆண்டில் சீனாவுக்கும் பரவியது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளிலேயே உலகில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கரும்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. எனினும், கரும்பு தற்போது 90ற்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சீனி கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. கரும்பில் இருந்து வெல்லம், பழுப்புச் சர்க்கரை, சீனி, கற்கண்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. கரும்பிலிருந்து சாறு பிழிந்தபின் உண்டாகும் சக்கையும் வீணாவதில்லை. இது காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.

மருத்துவக் குணங்கள்

கரும்பு உடலுக்கு சக்தியையும், பருமனையும் தருகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. இதய பலத்தை உண்டாக்குகிறது. வயிற்றிலுள்ள அசுத்தத்தை வெளியேற்றுகிறது. சிறுநீரைப் பிரியச் செய்கிறது. உடலுக்குச் சக்தியும், பருமனும் அளிக்கிறது. வாய்த் துர்நாற்றத்தைப் போக்குகிறது. செங்கரும்பின் சாறு, வெல்லம், பழுப்புச் சர்க்கரை போன்றவை வாந்தி, பித்தம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

பழுப்புச்சர்க்கரை கெட்டியான சளியைக் கரைக்கிறது. கரும்புச்சாறு மிகவும் இனிப்பாக இருக்கும். விக்கலைப் போக்கும். உடல் எரிச்சலைத் தணிக்கும். கரும்புச் சாற்றை புளிக்க வைத்து ‘காடி’ தயாரிக்கப்படுகிறது. இது பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும். தாகத்தைக் குறைக்கும். தலைவலி, மயக்கம், தொண்டைப் புண், மூக்கில் நீர் ஒழுகல், ஆகியவற்றிற்கு காடியின் ஆவியை நுகரச் செய்யலாம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum