தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயுர்வேத கை வைத்திய முறைகள்

Go down

ஆயுர்வேத கை வைத்திய முறைகள் Empty ஆயுர்வேத கை வைத்திய முறைகள்

Post  meenu Thu Jan 24, 2013 2:16 pm

தலைவலிக்கு மருந்தாக 2 சொட்டு நொச்சி தைலத்தை மூக்கின் துவாரங்களில் தடவலாம். தலையிலும் இந்த தைலத்தை தடவலாம்.

• குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசி சாற்றை தேனில் கலந்து கொடுக்க வேண்டும்.

• சொத்தைப் பல் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து பல்லில் வைத்தால் தீவிரமான வலியை உடனே கட்டுப்படுத்தும். பிறகு தகுந்த வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

• காலில் சுளுக்கு வலி ஏற்பட்டால் சூடாக உப்பு, புளி சேர்த்து பற்று போட வேண்டும்.

• வயிற்று வலிக்கு வெந்நீரில் நெய்,சுக்கு,சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும். வலியுள்ள பகுதியில் சூடாக தைலம் தடவுவதும் நல்லது.

• வயிறு, நெஞ்சு எரிச்சலுக்கு உலர்ந்த கறுப்பு திராட்சை, கடுக்காய், சர்க்கரை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து சாப்பிட வேண்டும். அவற்றை அரைத்து வில்லைகளாக்கியும் சாப்பிடலாம். பாலுடன் சுக்கு கலந்து உட்கொள்வதும் நல்லது.

• வயிற்று வலிக்கு ஓமத்டித அரைத்து மோரில் கலந்து கொடுத்தாலும் குணம் கிடைக்கும்.

• மலம் சரிவர வெளியேற 1/2 ஸ்பூன் விளக்கெண்ணெயை சுக்கு வெந்நீரில் கலந்து உட்கொள்ளவேண்டும்.

• வாந்தி, குமட்டலுக்கு இஞ்சி சாறு, வெங்காய சாறு கலந்து கொடுக்கலாம்.

• இஞ்சி சாற்றில் புதினா,சிறிது உப்பு, வெங்காயம் கலந்து குடித்தால் அஜீரணம், குமட்டல், பசியின்மை,வயிற்று உப்புசம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

• குழந்தைகளின் சளிக்கு வேப்பெண்ணெயை மார்பு,முதுகுப் பகுதியில் தடவ வேண்டும்.

• சாதாரண தீப்புண்ணுக்கு சோற்று கற்றாழையின் உள் பகுதியில் உள்ள சோற்றை எடுத்து தடவலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum