தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த யோகாசன சிகிச்சை.

Go down

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த யோகாசன சிகிச்சை. Empty நீரிழிவு நோயை கட்டுப்படுத்த யோகாசன சிகிச்சை.

Post  ishwarya Tue May 21, 2013 11:30 am

சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல ஒரு நிலை தான். அதாவது இயற்கைக்கும், நோயாளிக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிட்டது என்று பொருள். யோகாசனங்கள் என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் நலம் தரும் பயிற்சிகள், ஒவ்வொரு ஆசனமும் நோயை தீர்க்கும் குணம் உடையது.

ஆழ்ந்த மூச்சுப் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அதனால் உடல் உள் உறுப்புகள், கணையம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் (ஆதார சக்கரங்கள்) ஏற்ற இறக்கங்களை சீர் செய்கிறது. யோகாசன சிகிச்சை எப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது? நீரிழிவு நோய்க்கு தரப்படுகின்ற நவீன மருந்துகள் சிறுநீரிலும், ரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவைப் கட்டுப்படுத்துகின்றன.
குறைக்கின்றன என்பது உண்மை தான்.
ஆனால் இந்த மருந்துகள் இன்சுலினை சுரக்கச் செய்யும் கணையத்தில் பீட்டா செல்களில் செயல்புரிவது இல்லை. அவற்றைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்வதும் இல்லை. இதன் காரணமாக, கணையமும், இன்சுலினைச் சுரக்கும் வாங்கர் ஹான்ஸ் திட்டுக்களும் நாளடைவில் சுருங்கி சூம்பிப்போய் விடுகின்றன.

ஓசையின்றி உயிரைப் பறிக்கும் நோய் நீரிழிவு நோய். இந்நோயால் கால் பாதங்கள், இருதயம், கண்கள், கிட்னி ஆகிய ராஜ உறுப்புகள் நேரடியாக பாதிக்கப்படும். இன்சுலினைச் சுரக்கச் செய்யும் சுரப்பி சூம்பி விடாமல் அதைத் தூண்டி அதன் செயலை ஒழுங்குப்படுத்துவது யோகாசனங்கள் மட்டுமே ஆகும்.

நீரிழிவுக்கு ஆட்பட்ட ஒருவர் தவறாது யோகாசனங்கள் தொடர்ந்து செய்யும் போது சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. அதே நேரத்தில், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகிறது. அத்துடன் நீரிழிவு நோயின் காரணமாக, தோன்றுகின்ற கண்பார்வைக் குறையும். வாதத் தொந்தரவும், தலைச்சுற்றல், அசதி போன்றவையும் நீங்குகின்றன. உடல் உறுப்பில் கண், காது, மூக்கு, வாய் போன்ற பல உறுப்புகள் வெளிப்பரப்பில் உள்ள சக்தியை வாங்கி உள் பரப்பில் கொடுக்கும். ஆனால், கணையம் மட்டும் உள்பரப்பும். வெளிப்பரப்பும் உறிஞ்சும், இதன் வேலை சக்தியை எடுப்பதுதானே ஒழிய கொடுப்பது இல்லை.

கணையத்தின் மேல்பரப்பில் இருக்கும் பாசகா என்ற பித்தம் உறிஞ்சுவது நின்றால் ரத்தத்தில் சர்க்கரை நோயும், கணையத்தின் உட்பரப்பில் இருக்கும் சமாணன் என்ற வாயு உறிஞ்சுது நின்றால் சிறுநீரில் சர்க்கரை நோயும் உண்டாகும் என்கிறது யோக மருத்துவம். இப்பயிற்சிகளுடன் உணவுத் திட்டங்களை கடைப்பிடித்து, ஒழுக்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டால், நோயுடன் போராட வேண்டிய நிலை இருக்காது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum