தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துளசியைப் பயன்படுத்துவது எப்படி?

Go down

துளசியைப் பயன்படுத்துவது எப்படி? Empty துளசியைப் பயன்படுத்துவது எப்படி?

Post  gandhimathi Thu Jan 24, 2013 1:41 pm

கோவில்களிலும், நீர்நிலை கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும். துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள். ஏனெனில், அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை பூமாதேவியின் அவதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.
விஷ்ணு சேவைக்கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக் கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும். பயபக்தியுடன் சாப்பிட வேண்டும்.
கருந்துளசி மகிமை
கருந்துளசி விசேஷ குணமுடையது. இதன் சாறை இரும்புக் கரண்டியில் சுடவைத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் கபக்கட்டு, காய்ச்சல் முதலானவை நீங்கும். நாய்த்துளசி என்ற ரகமும் சளியைக் குணமாக்கும் சக்தி கொண்டது.
துளசி அர்ச்சனை ஏன்?
பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார். அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள். துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது. இதைக் குணமாக்க துளசியைச் சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.
சங்காபிஷேகத்தில் துளசி.
சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மகாஞானி யாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum