தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க...

Go down

பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க... Empty பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க...

Post  meenu Thu Jan 24, 2013 1:34 pm

திருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயங்கள் பெண்களுக்கு சந்தோஷ அனுபவங்கள் என்றாலும், அவற்றின் மூலம் அவர்கள் இழக்கும் விஷயங்களும் நிறைய உள்ளன. குழந்தை பெற்றுக் கொள்வதெனத் தீர்மானித்து விட்டீர்களா? அதற்கு முன்பாக நீங்கள் அனுபவித்து மகிழ வேண்டிய சில விஷயங்கள் இதோ...

* கரு உண்டாகும் வரை நீங்கள் கல்லைத் தின்றாலும் சொரிக்கும். கருத்தாரித்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் மிக மிக சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தவிர உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் சாப்பிடவும் முடியாது. அது கூடாது, இது கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தாக வேண்டும். எனவே கர்ப்பம் தாரிப்பதற்கு முன்பே நாவை அடக்காமல் விரும்பியதை ஒரு பிடிபிடியுங்கள்.

* சூரிய வெளிச்சம் முகத்தில் படும்வரை தூங்குவதென்பதெல்லாம் நீங்கள் கர்ப்பம் தாரிக்கும் வரைதான். பிறகு உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு பல தூக்கமில்லாத இரவுகளுக்கு நீங்கள் பழக்கப்பட்டாக வேண்டும். எனவே கர்ப்பம் தரிக்கும் முன்பே தூக்கத்தையும் அனுபவித்து விடுங்கள்.

* திருமணத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு தமது உடல் அளவுகளைக் கவனிக்கும் அக்கறை போய் விடுகிறது. கர்ப்பம் தாசித்ததும் நிலமை இன்னும் மோசம்தான். கர்ப்பம் தாசித்த பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் அளவுக்கு மீறி சாப்பிடுவதும், அதன் விளைவாக உடல் பருத்துப் போவதும் சகஜமே. எனவே குழந்தை பெற்றுக் கொள்வதென முடிவெடுக்கும் பெண்கள் அதற்கு முன்பே தங்கள் உடலழகைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்திற்குப் பிறகும் கட்டுக்கோப்பான உடல் சாத்தியம்.

* கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சாசியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

* கருவுற்ற பிறகு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கணவன்- மனைவிக் கிடையேயான அந்தரங்க உறவுகள் தவிர்க்கப்பட வேண்டியதாகி விடுகிறது. பிரசவத்திற்குப் பிறகும் சில மாதங்கள் வரை உறவைத் தவிர்க்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum