தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீண்ட ஆயுளை தருகிறது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாம்பத்யம்

Go down

நீண்ட ஆயுளை தருகிறது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாம்பத்யம் Empty நீண்ட ஆயுளை தருகிறது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாம்பத்யம்

Post  meenu Thu Jan 24, 2013 1:30 pm

ஒவ்வொரு மனிதனையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுவது நோய் எதிர்ப்பு சக்தி. இது இல்லாத மக்களிடம் தான் ஏராளமான நோய்கள் வந்து `பசக்' கென ஒட்டிக் கொள்கிறது. நோயில் சிக்கும் மனிதனின் ஆயுள் குறைவதோடு மருத்துவத்திற்காகச் செய்யும் செலவுகள் சொத்துக்களை விற்கும் அளவுக்கு கொண்டு வந்து விடுகிறது.

ஆனால் பைசா செலவு இல்லாமல் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தாம்பத்யம் வாரி வழங்குவதாக சமீபத்தைய ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தைச் சேர்ந்த பிரபல `செக்சால ஜிஸ்ட்' நிபுணர் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறியதாவது:-

ஆண்-பெண் இடையேயான தாம்பத்ய உறவின் போது ஐ.ஜி.ஏ. என்ற வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது. டி.எச்.இ.ஏ. என்ற ஹார்மோன் உடலில் கூடுதலாக சுரக்கும். வாரத்தில் 2 முறை உறவில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் இந்தியா போன்ற நாடுகளில் பல நூறு கோடிகள் செலவிடப்படுகிறது.

முறையான உறவை மேற்கொண்டால் இந்த செலவுகள் அனைத்தும் அரசுக்கு மிச்சமாகும். சமீப காலமாக நம் நாட்டில் மாரடைப்பால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முறையற்ற உறவு தான் காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர். உறவின் போது ஆணின் உயிரணு பெண் உடலில் பாய்வதால் `ஆக்சிடோஜன்' அதிக அளவில் சுரக்கிறது.

இதனால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படாது. பெரும்பாலான நாடுகளில் மார்பக புற்று நோய் அதிகரிப்புக்கு முறையற்ற உறவு தான் காரணம் என்று கண்டறியப் பட்டுள்ளது. முறையான உறவு மூலம் நம் நாட்டில் ரூ.125 கோடி அளவுக்கு மருத்துவ செலவு மிச்சப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்கள் பலர் `புராஸ்டேட்' சுரப்பியில் புற்று நோய் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் முறையான உறவை கடைப்பிடித்தால் புராஸ்டேட் புற்று நோயில் இருந்து தப்பி விடலாம். உறவானது மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கிறது. இதில் கிடைக்கும் திருப்தி அவர்களை வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்கிறது. எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வைக்கிறது.

தெளிவான முடிவை எடுத்து வெற்றிச் சிகரங்களை தொட வைத்து விடுகிறது. ஊனமுற்றோரின் வாழ்விலும் ஏற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு இது புதுதெம்பு, உற்சாகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சில நாடுகளில் பல்வேறு நோய்களின் பாதிப்பால் தொழிலாளர்கள், ஊழியர்கள், அடிக்கடி `லீவு' எடுப்பார்கள்.

இதனால் தொழில்கள் கடும் பாதிப்படையும். ஆனால் முறையான உறவை கடைப்பிடித்தால் அவர்கள் நோயின்றி வாழ முடியும். இதனால் அவர்கள் லீவு எடுப்பது குறைவதால் ஆண்டு ரூ.1000 கோடி வரை மிச்சமாகும்.

மாரடைப்பை தடுக்கும்:

45 முதல் 59 வயது வரையான ஆண்-பெண்கள் முறையான உறவில் ஈடுபட்டால் டிஎச்இஏ ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோனும் அதிகரிக்கும் இவை இரண்டும் இதய தசைகளை வலுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுத்து விடுகிறது.

இந்த ஹார்மோன்கள் இதயத்திற்கு நல்ல பாதுகாப்பு அரணாகவும் திகழ்கிறது. இதுபற்றி சமீபத்தில் 918 ஜோடிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது உறவில் ஈடுபடுவோரின் இதயம் பலமாக இருப்பது தெரியவந்தது. மாரடைப்பு ஏற்படாத அளவுக்கு அவர்களது இதயம் சிறந்த முறையில் இயங்கியது தெரிய வந்தது.

`மாத கணக்கில் உறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். முறையான உறவில் ஈடுபட்டால் நம் நாட்டில் ரூ.100 கோடி அளவுக்கு இதய நோய் சிகிச்சைக்கான செலவு மிச்சமாகும்.

இளமையுடன் ஜொலிக்க...

ஆண்-பெண் இருவரும் முறையான உறவு மேற்கொண்டால் அவர்களது நரம்பு பலம் அடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். முகத்தில் ஒரு வித மினுமினுப்பு ஏற்படும். 10 ஆண்டுகள் வரை இளமையாக தோன்றுவார்கள்.

ஆனால் உறவில் சரிவர ஆர்வம் இல்லாமல் இருப்பவர்கள் நாள் முழுவதும் கவலையில் மூழ்கி வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் முகம் வெகு சீக்கிரத்திலேயே முதிர்ச்சி அடைந்து விடும். இதனால் தான் சிலர் 50 வயதிலேயே வயதானவர்கள் போல் `ஆகி' விடுகிறார்கள்.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

நம் நாட்டில் ஏராளமான பேர் இடுப்பு தசை பிடிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். ஆண்-பெண் இருவரும் வாரம் 2 முறை உறவில் ஈடுபட்டால் இடுப்பு பலப்படும். தசைப்பிடிப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

பெண்களின் கருப்பை கீழ் இறங்குவதும் தடுக்கப்பட்டு விடும். சில பெண்களுக்கு பேசும் போது, இருமும் போதும், சிறுசீர் கசியும். முறையான உறவு மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து விடலாம். குழந்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பிறப்பது தடுக்கப்பட்டு விடும்.

மன அழுத்தம் நீங்கும்:

நம் நாட்டைப் பொறுத்தவரையில் தம்பதி இடையே குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அந்த உறவுகள் சரி இல்லாததால் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுகிறது. காரணம் அதில் ஈடுபடும்போது மன அழுத்தம், கவலை, வெகுவாக குறையும்.

இதனால் வாழ்வில் ஒருவித நிம்மதி ஏற்படுவதால் குழப்பம் நீங்கும். தற்கொலை எண்ணம் மனதில் சுத்தமாக வராது. எந்த வேலையையும் முழு ஈடுபட்டுடன் செய்ய முடியும். சிலர் தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்துகிறார்கள். இந்த தூக்க மாத்திரைக்காக செய்யப்படும் செலவு குறைக்கப்பட்டால் நம் நாட்டிற்கு ரூ. 100 கோடி வரை மிச்சமாகும்.

விவாகரத்து குறையும்:

தம்பதி இடையே உறவு சீராக இருந்தால் கருத்து வேறுபாடு அடியோடு குறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் வளரும். சகிப்புத்தன்மை தானாகவே வந்து அவர்களை குதூகலம் அடையச் செய்யும்.

சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கும் பொங்கி எழும் பெண்கள் கப்-சிப்பாகி விடுவார்கள். கோபத்தை அதிகப்படுத்தும் சுரப்பிகளை உறவானது வெகுவாக குறைப்பதுதான் காரணம். எனவே தம்பதியர் உறவை சீர்குலையாமல் பார்த்துக் கொண்டால் எக்காரணத்தை கொண்டும் விவாகரத்து ஏணியில் ஏற மாட்டார்க்ள.

இந்த விவாகரத்து குறைந்தால் நம் நாட்டுக்கு ரூ. 300 கோடி வரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்கிறார் டாக்டர் காமராஜ்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum