தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் உங்களுக்கும் தெரியனுமா?

Go down

 அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் உங்களுக்கும் தெரியனுமா? Empty அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் உங்களுக்கும் தெரியனுமா?

Post  ishwarya Sat May 11, 2013 12:43 pm

இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். அவ்வாறு ஆசைப்படுபவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் முதலில் இருப்பார்கள். அதிலும் அவர்கள் ஒரு நாள் மேக்-கப் இல்லாத நாட்களை பார்க்கவே முடியாது. இரவில் படுக்கும் போது கூட முழு மே-கப்பில் தான் உறங்குவார்கள். அதனால் தான் அவர்கள் சருமம் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கிறது. அவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்ப்போமா!!!

பாடி லோசன்: பாடி லோசன் என்பது உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை நீக்கப் பயன்படுத்தும் பொருள். நிறைய மக்கள் பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் சருமம் நன்கு பட்டுப் போன்று காணப்பட்டது. ஆனால், அதே பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தடவாமல், உடல் முழுவதும், தடவி, பின் குளிர்ந்த நரில் குளிக்க வேண்டும்.

ஃபேஸ் க்ரீம்: உடரில் உள்ள மற்ற பகுதிகளை விட, முகத்தில் இருக்கும் சருமம் தான் மிகவும் முக்கியமானவை. ஆகவே அப்போது ஒரு ஸ்பெஷல் க்ரீமை வாங்கி சருமத்திற்கு தடவ வேண்டும். இதனால் சூரியக் கதிர்கள். சருமத்தில் நேரடியாக படாமல் தடுப்பதோடு, சருமம் அழகாக பொலிவோடு மின்னும்.

ஃபேஸ் வாஷ்: ஆண்கள் முகத்தை சோப்பு அல்லது ஏதேனும் ஆன்டி-செப்டிப் மூலம் தான் முகத்தை கழுவுவார்கள். ஆனால் அதுவே பெண்கள் என்றால், வீட்டு பாத்ரூமில் ஃபேஸ் வாஷ் என்ற ஒரு க்ரீமை வாங்கி பயன்படுத்தி முகத்தை கழுவுவார்கள். அவ்வாறு கழுவும் போது, அந்த ஃபேஸ் வாஷை பயனற்றது என்று எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் இதனால் சருமம் அழகாக இருப்பதோடு, எந்த ஒரு பக்கவிளைவுமின்றி பட்டுப் போன்று இருக்கும்.

ஸ்கரப்: சாதாரணமாக முகத்தைக் கழுவினால் மட்டும், முகத்தில் உள்ள அழுக்குகளான இறந்த செல்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்காது. ஆகவே அப்போது முகத்திற்கு ஸ்கரப் செய்வார்கள். மேலும் ஸ்கரப் செய்யும் போது இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி செய்வது நல்லது.

பாதத்திற்கான க்ரீம்: பாடி லோசன் எப்போதும் அனைத்து இடங்களுக்கும் சரிப்படாது. ஏனென்றால் பாத சருமமும், முகச்சருமமும் சற்று வித்தியாசமாக இருக்கும். பாத சருமம் முகச்சருமத்தை விட கடினமானது. ஆகவே அதற்கென்று விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தினால் தான், அதற்கான பலன் கிடைக்கும். அதனால் தான் பெண்களின் பாதங்கள் மென்மையாக இருக்கின்றன.

கிளின்சிங் மில்க்: எத்தனை அழகுப் பொருட்கள் இருந்தாலும், சருமத்தை சுத்தம் செய்ய கிளின்சிங் மில்க்கை விட சிறந்தத எதுவும் இல்லை. இவை முகத்திற்கு போடும் மேக்-கப்பை எளிதில் நீக்கிவிடுவதோடு, மேக்-கப் போட்டு நீக்கியப்பின் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்திற்கு போதிய எண்ணெய் பசையைத் தருகிறது. எனவே இவற்றை முக்கியமாக அனைத்து பெண்களும் பயன்படுத்துவார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum