சோரியாஸிஸ் தோல் நோயை பற்றி தெரிந்து கொள்வோம்
Page 1 of 1
சோரியாஸிஸ் தோல் நோயை பற்றி தெரிந்து கொள்வோம்
தலை முதல் பாதம் வரை உடலின் தோலில் பரவும் காளான் வகை கிருமி சோரியாஸிஸ். இந்த கிருமி உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. இரத்தத்தில் கலப்பதும் இல்லை, மற்றவர்களுக்கு தொற்றுவதும் இல்லை. சோரியாஸிஸ் பாதிப்பில் இரண்டு வகை உண்டு. உடலில் புளிப்பு சுவை அதிகரிக்கும் போதும் உடல் வெப்படைந்து தலை மற்றும் முழங்கையில் கீழும் முழங்காலின் கீழும் அதிக பாதிப்பு இருக்கும்.
சொல்ல முடியாத அரிப்பு இருக்கும். செதில் அதிகமாய் உதிரும். மற்றொன்று பனிக்காலங்களில் அதிக தொந்தரவு இருக்கும். இவர்கள் புரத சத்து அதிகம் உள்ள உணவுகள் உண்பவர்கள். உதாரணமாக தினசரி பால், முட்டை, வாழைப்பழம் சாப்பிடுபவர்கள் மற்றும் அசைவ உணவுகள், பருப்பு வகைகள் சாப்பிடுவர்கள் பனிக் காலங்களில் அதிக தொந்தரவு இருக்கும்.
இவர்களுக்கு உடலில் மார்பு, வயிறு, முதுகு, தொடை வரை பாதிப்பு அதிகமாய் இருக்கும். குளிர்ச்சியான புரதம் (கேழ்வரகு, பால், மட்டன், பாசி பருப்பு, உளுந்து) அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் ஆங்கில மருத்துவத்தில் டீத்தோ டிராக்ஸ் என்ற மாத்திரைகள் தேவைக்கு அதிகமாய் எடுப்பவர்கள் மூட்டு வீக்கம், வலி போன்ற அவதிக்கு உட்படுவார்கள்.
ஆங்கில மருத்துவத்தில் சல்போ சாலிசிலிக் ஆசிட் கலந்த ஆயின்மென்ட் தற்காலிக பலன் கிடைத்தாலும் தோலின் இரண்டு அடுக்குகள் மட்டுமே வேலை செய்வதால் முழு பலன் கிடைப்பதில்லை. தோலின் ஏழு அடுக்குகள் பாதிப்பு உள்ளதால் மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுக்கும். குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள் அதிகம் சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பர்.
தலையில் சோரியாஸிஸ் பாதிப்பு உள்ளவர்கள் தொப்பி, ஹெல்மெட் அணிந்தால் உள்ளே வியர்வை தங்கி பாதிப்பை அதிகப்படுத்தும். மிளகாய், மிளகு, இஞ்சி போன்ற காரச் சத்துள்ள உணவுகள் பனிக்காலங்களில் பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்லது செய்யும். சோரியாஸிஸ் பாதிப்பு உள்ள இடத்தில் குளிர்ச்சி தன்மையுள்ள பொருட்கள், மருந்துகள் தடவினால் தோலில் விரிவடைந்து கொண்டே போகும்.
மேலும் வெடிப்பு, வலி, இரத்தம் வருதல், மாலை வேளையில் குளிர் சுரம் போன்ற பாதிப்பு இருக்கும். அதிக வெயிலில் அலைவது அடுப்பு அனலில் வேலை செய்வது போன்றவை தொந்தரவை அதிகமாக்கும். சோரியாஸிஸ் குணப்படுத்த முடியாத நோய் என பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான கருத்து. மிக எளிதில் குணமாக்க கூடியதே. சில அடிப்படை விஷயங்கள் புரிந்து கொண்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.
* நீண்ட நேரம் குளிக்கக்கூடாது.
* தலைக்கு குளிர்ச்சியான எண்ணை தேய்க்கக் கூடாது.
* புளிப்பு சுவை உள்ள உணவுகள் குறைக்க வேண்டும்.
* வியர்வை அதிகம் உள்ளவர்கள் மாலை வேளையில் குளிக்க வேண்டும். தினம் 2 வேளை குளிக்கக்கூடாது.
ஆடுதீண்டா பாளை, வெட்பாலை கடுகு ரோஹினி, திரி கடுகு போன்ற மூலிகை இலைகள், கடை சரக்குகள் சேர்த்து நல்லெண்ணையில் காய்ச்சிய தைலம் தடவி குளித்து வர சிறப்பான பலன் கிடைக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சோரியாஸிஸ் தோல் நோயை பற்றி தெரிந்து கொள்வோம்
» பழகத் தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம் சிவநெறி
» தெரிந்து கொள்வோம் சிவநெறி
» தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம்
» பழகத் தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம் சிவநெறி
» தெரிந்து கொள்வோம் சிவநெறி
» தென் ஆப்பிரிக்காவை தெரிந்து கொள்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum