தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரண கோஷத்தின் மகத்துவம்

Go down

சரண கோஷத்தின் மகத்துவம் Empty சரண கோஷத்தின் மகத்துவம்

Post  amma Fri Jan 11, 2013 6:14 pm



சபரிமலை என்றதும் `சாமியே சரணம் அய்யப்பா' என்ற சரண கோஷம் தான் காதுகளில் பாய்கிறது. மகத்துவம் மிக்க இந்த சரண கோஷத்தில் `ச' என்ற எழுத்து விரோதிகளை அழிக்கக்கூடியது. `ர' என்ற உச்சரிப்பு ஞானம் தர வல்லது. `ண' என்ற எழுத்து சாந்தம் அளிப்பது. `சுவாமியே சரணம்' என்று அடி வயிற்றில் இருந்து நாம் எழுப்பும் ஒலியானது சக்தி, ஞானம், சாந்தம் ஆகிய மூன்றும் தருகிறது.

ரூ.10 ஆயிரம் கோடி........

திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலை சுமார் ரூபாய் 30 கோடியளவில் காப்பீடு செய்து கொண்டுள்ளது. மேலும் இந்த இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு விபத்துகளில் இருந்து இலவசமாகக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

நீலக்கல்லில் இருந்து மலையேற்றப் பாதையில் சன்னிதானம் வரை சென்றடையும் 18 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில் விபத்துக்குள்ளாகி அடிபட்டோர் மற்றும் இறந்தவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாக வழங்க இயலும். சபரிமலைப் பயணம் காரணமாக கேரள அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைப்பதோடு, கேரளத்தின் பொருளாதாரத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வரை வருமானத்தை பங்களித்து வருகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum