தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசவ கால பாதுகாப்பு

Go down

பிரசவ கால பாதுகாப்பு Empty பிரசவ கால பாதுகாப்பு

Post  meenu Thu Jan 24, 2013 1:07 pm

• கருவுற்ற காலங்களில் பஸ், ஆட்டோ, ஸ்கூட்டர் போன்ற அதிர்வைத்தரும் வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. மேலும் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.

• பிரசவ காலங்களில் உதிரப்போக்கு, வயிற்றுவலி, தலைவலி, மயக்கம், தூக்கமின்மை, பார்வை குன்றுதல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். கருவுற்ற நாளிலிருந்து ஆறுமாதத்தில் மாதம் ஒரு முறையும், ஏழு-எட்டு மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும், பிரசவத்தின் இறுதியில் வாரம் ஒரு முறையும் டாக்டரின் நேரடி மேற்பார்வையில் பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் பெற வேண்டும்.

• பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அடங்கியிருப்பதால் அவற்றைப் போதிய அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• அதிகக் கொழுப்பு நிறைந்த வெண்ணை, பாலாடை, நெய், ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள்கரு, தேங்காய் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.

• மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணின் ரத்த அழுத்த நிலைகளை, அவ்வப்போது அறிந்து கொள்வதில் சற்று அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கருவுறும் காலத்திற்கு முன்பே ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பின், அதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

• கருவுற்ற பெண், தனக்கு ஏற்பட்டிருந்த/ஏற்பட்டிருக்கும் நோய்கள், அதன் பாதிப்புகள் குறித்து மருத்துவரிடம் தெளிவாக விளக்கிக் கூற வேண்டும். இது பிற்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum