தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ மகா அஷ்ட பைரவர் மந்திராலயம்

Go down

ஸ்ரீ மகா அஷ்ட பைரவர் மந்திராலயம் Empty ஸ்ரீ மகா அஷ்ட பைரவர் மந்திராலயம்

Post  amma Fri Jan 11, 2013 6:12 pm

பைரவரின் அவதாரமகத் திகழும் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பைரவரின் அருளாற்றலை இந்த உலகம் உணர வேண்டும் என்பதற்காக தொடங்கியதே ஸ்ரீமகா அஷ்ட பைரவ மந்திராலயம் ஆகும். 29-7-2009 அன்று இந்த மந்திராலயம் உருவானது. பரைவர் தொடர்பாக ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் மேற்கொள்ளும் எல்லா பணிகளுக்கும் இந்த

மந்திராலயம்தான் அடித்தளமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மந்திராலயத்தின் நிறுவ னர் மற்றும் தலைவராக பரைவஸ்ரீசெல்வி உள்ளார். சிவம் பி.டி. பிரபாகர், சிவம் ஜி.வாசுதேவன், சிவம் என்.தமிழ் குமார் ஆகிய மூவரும் மந்திராலயத்தின் டிரஸ்டிகளாக பொறுப்பேற்றுள்ளார்.

பொதுவாக ஒரு அமைப்பு தொடங்கப்படுகிறது என்றால் பெரும்பாலானவர்கள் தங்களை அந்த அமைப்பில் முக்கிய பதவியில் நிலை நிறுத்திக்கொள்வார்கள். தனக்கு போகத்தானே தானம் என்பது போல தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் பதவிகளை வாரி வழங்குவார்கள். இதனால் எல்லா சுகபோகமும் ஒரு குடும்பத்துக்கு உள்ளேயே இருக்கும். ஆனால் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள், இந்த நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராகத் திகழ்கிறார்.

ஸ்ரீமகா அஷ்ட பைரவர் மந்திராலயம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்ததும், அவர் பைரவரிடம் பலன் பெற்ற நபர்களையே முக்கியஸ்தர்களாக நியமிக்க தீர்மானித்தார். இதற்காக அவர் பைரவ பக்தர்களுக்கு, அவர்களுக்கு தெரியாமலேயே பல்வேறு பரீட்சைகளை வைத்தார்.

சில சோதனைகளை காட்டினார். ஆனாலும் பைரவம்தான் இந்த உலகம் என்று மனதளவில் 100 சதவீதம் ஏற்புடையவர்களை மட்டும் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள்தேர்வு செய்தார். அவர்களுக்கும் சில அக்னி பரீட்சை வைத்தார். அதில் இருந்து புடம் போட்ட தங்கங்களாக வந்தவர்தான் இன்று ஸ்ரீமகா அஷ்ட பைரவ மந்திராலயத்தை நிர்வாகம் செய்கிறார்கள்.

மற்றபடி ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பைரவ உடலாக இருந்து அருள்வாக்கு அளிக்கிறார். அவர் தவிர அவர் மனைவி உள்பட அவர் குடும்பத்தினர் யாரும் இந்த அமைப்பில் எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மந்திராலயங்களுக்கும், இந்த மந்திராலயத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

பைரவ சித்தாந்தம் சுவாமிகள் பற்றியோ, மந்திராலயம் பற்றியோ இதுவரை விளம்பரம் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. எனவே ஸ்ரீமகா அஷ்ட பைரவர் மந்திரலயம் வளர்ச்சி, மிக மெதுவான வளர்ச்சியாக இறைவன் ஆதிக்கத்தில் பூரிப்படைந்துள்ளது. மேலும் ஸ்ரீபைரவ சிந்தாந்தம் சுவாமிகள் பலன் அளிப்பவராகவே மட்டும் இருப்பதும் மந்திராலய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மந்திராலயத்திற்கு சென்றால் இவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். இவர் செல்போன் வைத்துக் கொள்வதில்லை. எனவே இவரை சந்திக்க விரும்புபவர்கள் மந்திராலயம் நிர்வாகிகளிடம் போனில் பேசி சந்திப்பை உறுதி செய்து கொண்டு சென்று வரலாம். நோய் ஆனாலும் சரி... பேயானாலும் சரி...

எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் மனதில் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சவாமிகளை நினைத்து அழைக்கலாம். நிச்சயம் பைரவர் உதவுவார். பொதுவாக மற்ற தெய்வங்களுக்கும், பைரவருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பைரவரின் உருவ அமைப்பு, செயல்பாடுகளை மற்ற தெய்வங்களிடம் காண இயலாது.

எனவே பைரவம் உடல் பெற்ற சுவாமிகளின் அருள்வாக்கும், மற்றவர்களிடம் இருந்து முழுமையாக வித்தியாப்பட்டுள்ளது. ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் கண்ணை மூடிக்கொண்டு குறி சொல்வதில்லை. எலுமிச்சம் பழம் உள்பட எதுவும் பரிகாரமாக கொடுப்பதில்லை. ஒருவரது முகத்தை பார்த்த மறு வினாடியே கடகடவென அவரை பற்றி சொல்லத் தொடங்கி விடுவார். இது சொல்லில் புரியாது.

அனுபவத்தில் பலன் பெற்றால்தான் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளை கொஞ்சமாவது உணர்ந்து கொள்ள முடியும். இவர் மாயை சக்தி எதுவும் செய்வதில்லை. இறை சக்தியை மட்டுமே கடவுளிடம் காட்டுகிறார். மூட நம்பிக்கையை சிலர் வளர்ப்பதோ, ஊக்குவிப்பதோ இல்லை. மூட நம்பிக்கை செயல்களில் இறங்காதே என்பதை தெளிவாக உணர்த்துகிறார்.

சாதிப்பதை இவர் ஒருபோதும் சாதனை என்று சொல்வது இல்லை. அது எனது பணிகளில் ஒன்று என்று ஆத்மார்த்தமாக சொல்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களை மகிழ்ச்சிப்படுத்தி, தன்னிலையாக இவர் ஆட்சி செய்து வருகிறார். இதனால் மந்திராலயத்தின் புகழ் நாளுக்கு நாள் பரவியபடி உள்ளது.

தினமும் மேற்கு தாம்பரத்தில் உள்ள மந்திராலயத்துக்கு ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளை சந்திக்க ஏராளமானவார்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். தன்னை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் இவர் மந்திராலயத்தில் வசதிகள் செய்துள்ளார். பூஜைக்காக தனித்தனி அறைகள் உள்ளன. எனவே மந்திராலய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பைரவரை தேடும் உங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.

1. பைரவஸ்ரீசெல்வி (நிறுவனர்) 9940392913.
2. சிவம் ஜி.வாசுதேவன் (டிரஸ்டி) 9080152535.
3. சிவம் என்.தமிழ்குமார் (டிரஸ்டி) 9444460759.

மந்திராலய முகவரி: 17-பி,
4-வது குறுக்குத்தெரு,
கல்யாண்நகர்,
மேற்கு தாம்பரம்,
சென்னை - 600 045.

ஆடும் கும்ப கலசம்......

திருவடி சூலம் ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலயத்தின் மூலவர் கருவறை கட்டுமானம் மிக, மிக வித்தியாசமானது. தமிழ்நாட்டில் உள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. பொதுவாக கோவில் என்றால் மாட வீதிகளும், கருவறையும் ராஜகோபுரமும் காணப்படும்.

ஆனால் இத்தலத்தில் பைரவர் ஆலயத்தை பார்த்தால் அரண்மனை கட்டிட அமைப்பு கலந்த ஆலய அமைப்பை காணலாம். மேலும் கருவறை கோபுரம் உச்சிவடிவமாக நீண்டுள்ளது. உச்சியில் கும்ப கலசம் வைத்துள்ளனர். இந்த கும்ப கலசம் காற்றில் அசைந்தாடும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டில் வேறு எந்த ஒரு ஆலயத்திலும் இப்படி அசைந்தாடும் கும்ப கலச அமைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கும்ப கலசத்துக்கு ஆகர்ஷணாசக்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கும்ப கலசத்தில் இருந்து மழை நீர் சொட்டு, சொட்டாக பைரவர் மீது விழ ஏற்பாடு செய்துள்ளனர். பைரவர் நிற்கும் பீடம் வெற்றிடமாகும். இது பஞ்சபூதங்களில் வாயு சக்தியை குறிக்கிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum