தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசலாமே...

Go down

கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசலாமே... Empty கர்ப்பிணிகள் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசலாமே...

Post  meenu Thu Jan 24, 2013 11:35 am

தாயின் கருவில் இருக்கும் குழந்தை முதலில் இதய துடிப்பு சத்தத்தை கேட்கும். வளர வளர அம்மாவின் சத்தத்தை உணரத் தொடங்கும். அப்போதிருந்து தாய், வெளிப்புறத்தில் இருந்து குழந்தையிடம் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். கருக்குழந்தை எட்டி உதைக்கும்போது, தாய் கையால் தட்டிக்கொடுத்து வருடவேண்டும். இது உணர்வுரீதியான நெருக்கத்தை உருவாக்கும்.

`நான் இப்போது சாப்பிடப் போகிறேன். உனக்காகவும் நான் சாப்பிடுகிறேன்' என்று கூறவேண்டும். வயிற்றுக்குள் இருக்கும் போதே அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை உணர்த்தும் விதத்தில் முக்கியமான செயல்களை எல்லாம் குழந்தையிடம் சொல்லலாம். குட் மார்னிங், குட் நைட் சொல்லவேண்டும். கருப்பைதான் குழந்தையின் முதல் உலகம்.

அங்கிருக்கும்போது குழந்தைக்கு என்ன கிடைக்கிறதோ அதன் அடிப்படையில்தான் பிறந்த பின்பு அதன் எதிர்கால செயல்பாடுகள் அமையும். அதனால் அம்மா சிரித்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நல்ல சிந்தனைகளை வாய்விட்டு கர்ப்பிணிகள் சொல்லவேண்டும். `அன்பிலே அறிவிலே நீ சிறந்திருப்பாய். அழகிலும் நீ சிறந்திருக்கிறாய்.

ஆனந்தமாய் வளர்கிறாய். தன்னம்பிக்கை, தைரியம் பெற்றிருக்கிறாய்' என்றெல்லாம், வயிற்று குழந்தையின் மீது கையை வைத்துக்கொண்டு கூறவேண்டும். வீணை, வயலின், புல்லாங்குழல் போன்ற இசைகளை கர்ப்பிணிகள் கேட்கவேண்டும். அது குழந்தைக்கு அமைதியான சூழலை உருவாக்கும்.

புத்தகம் படிப்பவர்கள், குழந்தைகளுக்கான நன்னெறி கதைகளை வாசிக்கவேண்டும். நல்ல கதைகளை வாசிக்கும்போது அம்மாவுக்கு ஏற்படும் நல்ல உணர்வுகள், வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். கர்ப்பிணிகள் காலை அரை மணிநேரமும், மாலை அரை மணிநேரமும் அவர்களுக்கான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுங்கள்
» வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் செல்போன்கள்
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை 1 1/2 மாதத்தில் கண்டுபிடிக்கலாம்: புதிய ஆய்வில் தகவல்
» குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும். எந்தப் பூவில
» மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் முகத்திற்கு வராமல் தடுக்கவும் உதவும்.. கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதி சருமத்திற்கு மென

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum