தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிசேரியன் சொல்லும் `பாடங்கள்'

Go down

சிசேரியன் சொல்லும் `பாடங்கள்' Empty சிசேரியன் சொல்லும் `பாடங்கள்'

Post  meenu Wed Jan 23, 2013 1:42 pm

குழந்தை பிறப்பு இரண்டு விதங்களில் நிகழ்கிறது.

ஒன்று: பிறப்பு உறுப்பு வழியாக வெளியேறுவது. இதை சுக பிரசவ நிலை என்கிறோம். பிரசவவலி எடுத்து, பிந்தைய செயல்கள் ஒவ்வொன்றும் இயல்பாக நடந்தால், இந்த இயற்கையான முறையில் குழந்தை வெளியேற்றப்படுகிறது.

இரண்டு: சிசேரியன். கருப்பையில் ஆபரேஷன் செய்து குழந்தை வெளியே எடுக்கப்படும் நிலை இது. சிசேரியனுக்கான காரணங்கள் என்னென்ன?

* குழந்தையின் தலை சரியாக திரும்பி கீழ் நோக்கி வராமல் இருத்தல்.
* கழுத்தில் நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்ளுதல்.
* கருப்பைக்குள் இருக்கும் `ஆம்னியோட்டிக்' திரவம் குறைந்து போதல்.
* குழந்தையின் நாடித் துடிப்பு குறைதல்.
* அம்மாவின் ரத்த அழுத்தம் உயருதல்.
* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுக்குள் இருத்தல்.
* பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பு சிறிதாக இருத்தல்.
* அம்மாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு மூலம், குழந்தை பெரிதாகுதல். ...

இன்னும் பல காரணங்களால் சிசேரியன் தேவையாகிறது. சிசேரியனில் `கிளாசிக்கல் சிசேரியன்' என்பது கருப்பையின் மேல் பகுதியில் ஆபரேஷன் செய்யப்படுவது. `லோயர் செக்மென்ட் சிசேரியன்' என்பது கருப்பையின் கீழ் பகுதியில் செய்யப்படுவது. கிட்டத்தட்ட கர்ப்பிணியின் 9-வது மாதத்தில் கருப்பையின் கீழ் பகுதியில் `லோயர் செக்மென்ட்' என்பது உருவாகிறது. அதில் `கட்' செய்து குழந்தை வெளியே எடுக்கப்படும்.

சிசேரியனின்போது 8 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை தையல் போடப்படும். கருப்பையின் உள் சுவர் சேர்ந்துவிடாமல், ஒரு லேயர் அல்லது இரண்டு லேயர் தையல் போடப்படும். இதுவே சிறந்த வழியாக கருதப்படுகிறது. நவீன மருத்துவத்தின் அற்புதம்தான் சிசேரியன். ஆனால் முதல் தடவை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த முறை அதிக கவனம் செலுத்தவேண்டும். பிரசவ வலி வரும் வரை வீட்டில் வைத்துக்கொண்டிருக்கக்கூடாது.

வலி வந்தால் கருப்பை கிழிந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும். எனவே முதலிலே எல்லா சவுகரியமும் கொண்ட ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடவேண்டும். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து, ஏற்கனவே தையல் போட்ட இடம் எப்படி இருக்கிறது? தையல் பிரியும் நிலையில் உள்ளதா? குழந்தை எந்த நிலையில் இருக்கிறது? என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும்.

கவனித்து எப்படிப்பட்ட பிரசவம் தேவை என்பதை முடிவு செய்யவேண்டும். சிசேரியன் செய்து கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிக்கக்கூடாது என்ற நிலை இப்போது இல்லை. நவீன மருத்துவ உலகம் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவதால் அவர்கள் மீண்டும் கர்ப்பமாகிக்கொள்ளலாம். அதிக சிரமமின்றி குழந்தையை பெற்றெடுக்கவும் செய்யலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum