தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்ப்பாலின் மகத்துவம்

Go down

தாய்ப்பாலின் மகத்துவம் Empty தாய்ப்பாலின் மகத்துவம்

Post  meenu Wed Jan 23, 2013 1:34 pm


குழந்தை பெற்றுக் கொண்டதும் பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. தங்கள் அழகு கெட்டுவிடும் என்றும், இன்னும் பிற காரணங்களாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாயையும், குழந்தையையும் பாதுகாத்து மேம்படச் செய்கிறது.

தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கால்சியம் விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன.

ஆகவே எல்லாவித சத்துக்களும் அடங்கிய பால் குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. தாய்ப்பால் குடிக்கின்ற குழந்தைகளுக்கு தனியாக வேறு எந்தவிதமான சத்துணவையும் தரவேண்டிய அவசியமே இல்லை. பச்சிளங்குழந்தைக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது அவசியம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum