தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உயிரணு தானம்

Go down

 உயிரணு தானம்  Empty உயிரணு தானம்

Post  meenu Wed Jan 23, 2013 1:23 pm

எல்லா மனிதர்களுமே குறிப்பாகப் பெண்கள் தானமாக ஏதாவது கிடைக்கப் போகிறது என்றால், உடனே அதை எதிர்பார்ப்பார்கள், உயிரணு தானத்தைத் தவிர, கணவனின் வாரிசை சுமப்பதைத்தான் கல்யாணமான எல்லா பெண்களுமே விரும்புவார்கள். மனைவியின் வயிற்றிலிருந்து தனது வாரிசுதான் உருவாக வேண்டும் என்று கணவர்கள் விரும்புவார்கள்.

என்னதான் மலடியாக இருந்து, இன்னொருவர் உயிரணுவை கருப்பைக்குள் சுமந்து தனது மனைவி கருவைச் சுமந்து குழந்தைப் பெற்றாலும், அதைத் தனது சொந்த மகவாக நினைக்கிற பக்குவம் என்பது அரிதாகத்தான் வரும். இவ்வாறே தது கரு முட்டையிலிருந்து உருவாகாத பிள்ளையை தாய் அங்கீகரிப்பதும் கொஞ்சம் சிரமமான விஷம்தான்.

இந்த நிலையெல்லாம் எப்போது ஏற்படுகின்றன? ஆண் கருத்தரிப்பிக்கவோ, பெண் கருததரிக்கவோ கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லாமல் போகும் போது. அதாவது ஆணுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமடல், பெண்ணுக்கு முழு மலடு ஏற்பட்டாலும், பெண்ணுக்குப் பிரச்சினை எதுவுமில்லாமல் ஆணுக்கு முழுமையான மலட்டுத்தன்மை உண்டானாலும் கருத்தரிப்புக்கு வாய்ப்பில்லாமல் போகிறது.

அல்லவா? இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் கருமுட்டைகளையும் உயிரணுக்களையும் தானமாகப் பெற்று கருத்தரிப்பை நிகழ்த்தும் விஞ்ஞான வளர்ச்சி நடைமுறையில் உள்ளது. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு கரு முட்டைகள் உருவாகாத நிலையிருக்கலாம். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணின் கரு முட்டையை தானமாகப் பெற்று தனது கணவரின் உயிரணு மூலம் கருத்தரிக்கச் செய்து, அதை தன் கருப்பைக்குள் வைத்து வளரச் செய்யலாம்.

அவ்வாறில்லாமல் கணவருக்கு உயிரணுக்களே இல்லாத நிலையில் முகம் தெரியாத, மரபுக் குறைபாடுகள் அற்ற யாரோ ஒருவரின் உயிரணுவை தானமாகப் பெற்று கருப்பைக்குள் வைத்து வளரச் செய்யலாம். கணவரின் உயிரணுக்கள் இயல்பாக இருந்தால், அதை பெண்ணின் கருப்பைக்குள்ளும், கருப்பைக் கழுத்துப் பகுதியிலும் செலுத்தி கருத்தரிக்க இயலுமா என்பதை பரிசோதிப்பார்கள்.

ஹார்மோன் பிரச்சினைகளுடைய சிலருடைய விந்தணுக்கள் குறை கொண்டதாக இருக்கும் போது, சுய இன்னம் மூலம் பல முறை உயிரணுக்களை வெளிப்படச் செய்து சேகரித்து, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததும் கருத்தரிக்கச் செய்வார்கள். இவ்வாறுதான் கலவியில் ஈடுபட இயலாதவர்களின் உயிரணுக்களையும் சேகரித்து மனைவியின் கருப்பைக்குள் செலுத்துவார்கள்.

இதை செயற்கை முறையிலான கருவூட்டம் செய்தல் என்று சொல்கிறார்கள். விந்தணுக்களைக் கொண்டு கருத்தரிப்பு நடந்தால் செயற்கை முறை விந்தேற்றம் என்றும், முட்டைகளை வாங்கி கருத்தரிப்பு நடந்தால் முட்டை தானம் என்றும் கூறுகிறார்கள். கணவனுக்கு விந்தணுக்களே வர வாய்ப்பில்லை என்றால் என்ன செய்வது? அப்போது தான் பிறருடை விந்தணுக்களை தானமாகப் பெறும் நிலை உருவாகிறது. விந்தணுவை தானமாகப் பெறும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

விந்து தானம்.....

மரபு ரீதியாக குறைபாடுகள், தொற்று நோய்கள் போன்றவை இல்லாத நபரிடமிருந்து, அனைத்துவிதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்பு, விந்து தானமாகப் பெறப்பட்டு, விந்து வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. தேவைப்படும் பெண்கள் குறிப்பிட்ட விந்து வங்கிகளை அணுகி தகவல் கேட்டால் அவர்களுக்குத் இது அளிக்கப்படுகிறது. எப்போது விந்தோற்றம் செய்யலாம் என்பதை அல்ட்ரா சவுண்டு, ரத்தப் பரிசோதனை போன்ற சோதனைகளை மேற்கொண்டு, உற்ற தருணத்தை முடிவு செய்து, உயிரணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்கிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum