தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளைஞர்களை புகையிலிருந்து விடுவியுங்கள்

Go down

 இளைஞர்களை புகையிலிருந்து விடுவியுங்கள்  Empty இளைஞர்களை புகையிலிருந்து விடுவியுங்கள்

Post  ishwarya Tue May 07, 2013 11:40 am

உலக புகைபிடிக்காத தினம் 2008 ஆண்டு கொண்டாட்டத்தில் 2.73 மில்லியன் புகைபிடிப்பவர்கள் கலந்து கொள்ளப் போகின்றார்கள். இவர்களில் 2.61 மில்லியன் ஆண், 120,000 பெண் புகையாளர்களும் அடங்குவர். சராசரி நாள் ஒன்றுக்கு மவெ.15 மில்லியன் சிகரெட்டுக்காக செலிவிடப்படுகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.

இந்த வருட கொண்டாட்டம் “இளைஞர்களைப் புகையிலிருந்து விடுவியுங்கள்” என்ற கருவுடன் கொண்டாப்படுகிறது. 18 வயதுக்கு கீழ்பட்ட 45லிருந்து 50 மலேசிய இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் புகைபிடிக்க தொடங்குக¢ன்றனர், இவர்களில் 8விழுக்காட்டினர் பள்ளி சிறார்களாவர். 2000கும் 2005ம் ஆண்டுக்கும் இடையில் பதின்ம வயதுடைய பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அவர்களிடைய 4 விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடு அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் 2004ம் ஆண்டில் ஐந்து மலேசிய இளைஞர்களிடையே ஒருவர் புகைப்பிடிப்பவராக இருக்கிறார் என இத்ரிஸ் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகத்தில் ஒவ்வொரு நாளும் 60,000க்கும் 100,000க்கும் இடைப்பட்ட குழந்தைகள் தினமும் புகைபிடிக்க தொடங்குகின்றனர். இதில் பெரும்பகுதியினர் ஆசியாவைச் சார்ந்தவர்கள்.

சிகரெட்டில் 4,000 விதமான இரசாயனங்கள் இருக்கின்றன, இதில் 2000 இரசாயனங்கள் நச்சுத்தன்மையானவை, 63 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. இருப்பினும் உலகலாவிய நிலையில் நாள் ஒன்றுக்கு அதன் விற்பனை 15 பில்லியன் அல்லது நிமிடத்திற்கு 10 மில்லியனாக இருக்கிறது. ஒவ்வொரு சிகரெட் பிடிக்கப்படும்போது மனிதனின் வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை அது குறைத்து விடுகிறது. உலகத்தில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதனால் அல்லது அது சம்பந்தப்பட்ட நோய்களினால் செத்து மடிகின்றனர்.

மலேசியாவில் மட்டும், ஒவ்வொரு வருடமும் 10,000 இறப்புக்கள் புகையினால் சம்பவிக்கிறது. இதில் குறைந்த பட்சம் 3000 நுரையீரல் புற்றுநோய், இருதய நோய் மற்றும் கடுமையான நுரையீரல் நோயாக இருக்கிறது.

சிகரெட் வாங்குபவர்களின் வயது 18லிருந்து 21க உயர்த்தப்பட வேண்டும் என இத்ரிஸ் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். அதோடு வாங்குவதை மட்டும் தடை செய்யாது இளம் குழந்தைகள் புகைபிடிப்பதையும் அரசாங்கம் அடியோடு தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

அமெரிக்காவில் இல்லிநோயிஸ் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கெடுபிடியான சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு, 69விழுக்காட்டினர் புகைபிடிப்பதை கைவிட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. வயது குறைந்தவர்கள் சிகரெட் வாங்குவதைக் கட்டுப்படுத்திய பிறகு அவர்களிடையே சிகரெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை 3லிருந்து 70 விழுக்காடாக குறைந்திருக்கிறது என அந்த ஆய்வு காட்டுகிறது.

பொதுவாக குடும்பங்களாக செல்லக்கூடிய பொது இடங்களான உணவு கடைகள், உணவகங்கள் பொது கேளிக்கை இடங்களிலும் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என பி.ப.சங்கம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.

அரசாங்கம் சுகாதார அமைச்சு மூலமாக, நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓய்வு இடங்கள், பொது கேளிக்கை இடங்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் அதிகமாக பொதுமக்கள் செல்லக்கூடிய இடங்களில் சிகரெட்டுக்கு தடை வ¢திக்க வேண்டும் என்றும் இத்ரிஸ் கேட்டு கொண்டார். இது பொதுமக்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் இரண்டாவது புகையாளராக மாறுவதிலிருந்தும் தடுக்கிறது.

710 மில்லியன் குழந்தைகள் உலக அளவில் இரண்டாவது புகையாளராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 6லிருந்து 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டாவது புகையாளராக இருக்கும் போது அவர்களிடயே வாசிப்பு, கணித மற்றும் சிந்தனை திறன் குறைவதாக அமெரிக்க சிஞ்சினாத்தி மருத்துவமனையின் ஆய்வு காட்டுகிறது.

பினாங்கில் அமைந்திருக்கும் இளைஞர் பூங்கா மற்றும் பூந்தோட்டத்தில் பொதுமக்கள் புகைபிடிப்பதாக பி.ப.சங்கத்திற்கு புகார்கள் வந்திருக்கின்றன. ஆகையால் இந்த இரு இடங்களிலும் புகைபிடிக்கக்கூடாத பகுதியாக அறிவிக்கும்படி பினாங்கு மாநில அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டு காள்கிறது. இங்கு வருகை புரியும் பொதுமக்கள், மற்றும் உடற்பயிற்சியாளர்களின் நலன் கருதி இந்நடவடிக்கை மிக அவசிமாகிறது என இத்ரிஸ் கூறினார்.

இத்தகைய நடவடிக்கை இளைஞர்களைப் புகையிலிருந்து காப்பதற்காக உதவுவதோடு மட்டுமல்லாமல், புகையிலையின் ஆபத்தைப் பற்றி தனிநபர் மற்றும் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமயும் என்று பி.ப.சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum