தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தையின்மைக்கு தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணியா?

Go down

குழந்தையின்மைக்கு தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணியா? Empty குழந்தையின்மைக்கு தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணியா?

Post  meenu Wed Jan 23, 2013 12:56 pm

இயல்பாகவே அருந்தும் தண்ணீரில் அயோடின் இல்லாது இருந்தாலும், உணவுப்பொருள்களில் அயோடீன் பற்றாக்குறை இருந்தாலும் தைராய்டு பிரச்சினை வரும். எனவே, போதிய அளவு அயோடின் சத்துள்ள உணவு பொருளை சேர்த்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.

குறிப்பாக மலைப் பாங்கான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடீன் பற்றாக் குறை ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் இருப்பதால் அயோடீன் கலந்த உப்பைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம். தைராய்டு அதிகமாகவும், குறைவாகவும் சுரக்கும் குறைகளைத் தவிர்க்க, பல்வேறு மருந்து மாத்திரைகள் தற்போது இருக்கின்றன.

தைராய்டு குறைபாட்டினைச் சீராக்க மாத்திரைகளை உட்கொள்ளும்போது, தைராய்டு சுரப்பு அதிகமாகி பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, தொடர்ந்து தைராய்டின் அளவை சோதித்து அறிந்து கொள்வது அவசியாமாகிறது.

தைராய்டு பிரச்சினையால் குழந்தையின்மை ஏற்படும் என்று கூற முடியாது. பல்வேறு இசைக்கருவிகளின் சங்கமிப்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுவது போல், பல்வேறு சுரப்பிகளின் இணைந்த செயல்பாட்டினாலேயே குழந்தைப்பேறு உருவாகின்றது. இத்தகு நிகழ்வுக்கு பிட்யூட்டரி மற்றும் ஹைபே தாலமஸ் என்னும் சுரப்பிகள் தான் மூலகாரணமாக அமைகின்றன. இச்சுரப்பிகள் தலையில் உள்ளது. இங்கிருந்துதான் தைராய்டு, ஓவரி, அட்ரினல் முதலான சுரப்பிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இதன் சுழற்சி வட்டத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அனைத்தையும் பாதிக்கிறது. மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவற்றால் கூட குழந்தை யின்மை ஏற்படுமாப இன்றைய சூழலில் குழந்தையின்மைக்கு மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை கூட முதன்மைக் காரணங்களாக மாறி விட்டன.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு பாட்டின் காரணமாகவே இப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கருமுட்டை வெளிவருதல், கரு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு, கருப்பையில் நீர் கேர்த்திருத்தல், கருக்குழாய் அடைப்பு மற்றும் அதிகரித்து வரும் ஆண் மலட்டுத்தன்மை என பல காரணங்கள் உள்ளன. குழந்தைப் பேறினைத்தள்ளிப் போடுவதாலும், எதிர்பாராமல் உருவான கருவிகளைச் சிதைப்பதாலும், கருக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

செடியில் பூக்கும் முதல் பூவைப்போல், முதல் குழந்தையானது வரப்பிரசாதம் போன்றது. ஆதலால் முதல் கருவை அழிக்காதீர்கள். இதனால் தொடர்ந்து குழந்தைப்பேறு கிடைக்கும் வாய்ப்பு பெருமளவு குறைந்து போகும் வாய்ப்பு அதிகம். ஒரு பசுமையான இலை பழுத்து, காம்புகள் சுருங்கி, காய்ந்து உதிர்வதைப்போல, நாட்கள் தள்ளிப்போய், மெதுவாக மாத விலக்கு நிற்கவேண்டும்.

இந்த நிலையிலிருந்து மாறுபட்டு, மாத விலக்கின்போது, இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், மருத்துவ சோதனைகளை செய்து புற்றுநோய் இருக்கிறதாப அல்லது வேறு பாதிப்புகள ஏதேனும் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆறுமாத இடைவெளிக்குப் பின், மாத விலக்கு ஏற்படுவது நின்று விட்டால், கர்ப்பப்பை உள்ளுறையின் கணம், மார்பக பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
எந்தக் குறைபாடுகளும் இல்லையென்றாலும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

ஏனெனில் மாதவிலக்கிற்கு பின்னர் உடலில் கல்சிய சத்து குறையும். இதனால் எலும்புகளில் பாதிப்புகள் உண்டாகும். உடல் பருமனாகும். இதய அழுத்தம் வரும். மாரடைப்பும் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே இது போன்ற பிரச்சினைகள் நிகழ்ந்தால், மருத்துவ ஆலோசனை கண்டிப்பாகத் தேவை.

மாதவிடாய் நின்ற பிறகு, சில பெண்களுக்கு கோபம் அதிகமாக வரும். திடீரென்று அதிக வியர்வை. ஏ/சிக்கு உள்ளேயும் வியர்த்தல், உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதுபோன்ற பாதிப்பிற்குள்ளானவர்களின் கவனத்தைத் திசை திருப்பி, தனிமையைப் போக்கி, சமூகப்பணிகள், செய்திகளை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது மனமாற்ற ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்கலாம்.

"ஈஸ்ட்ரோஜன்'' என்ற ஹார்மோனில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே இதற்கு காரணமாகும். இதனை களைய முறையான பரிசோதனைகள், மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும். "ஈஸ்ட்ரோஜன்'' மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். கல்சியமுள்ள உணவுப்பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். விற்றமிண்டியும் அதிகம் தேவை. அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்ற பெண்கள், மறு பிரசவத்தின்போதும் அறுவைச் சிகிச்சை மூலமாகத்தான் குழந்தை பெறமுடியும் என்கிறார்களே, இது சரிதானா? குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிக ரிப்பு பிரச்சினை ஏற்படுமாமே உண்மையா? ஒருமுறை அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்தால், தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலமாகத்தான் பிரசவம் செய்ய வேண்டியதிருக்கும் என்று எண்ணுவது தவறு.

இயற்கையான பிரசவத்திற்கு உடலமைப்பு தான் பிரதான காரணம். உடலமைப்பு தடையாக உள்ள பெண்களுக்கு கூட ஒருமுறை அறுவை சிகிச்சை முறை மூலம் குழந்தை பெற்றெடுத்த பின்னர், மறுமுறை சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்கும், உடல் எடை கூடுவதற்கும் மருத்துவ ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum