தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசவத்திற்கு பின் கவனம் தேவை

Go down

 பிரசவத்திற்கு பின் கவனம் தேவை  Empty பிரசவத்திற்கு பின் கவனம் தேவை

Post  meenu Tue Jan 22, 2013 6:05 pm


பிரசவத்திற்குப் பின் தாய்மார்கள் 48 மணி நேரத்திற்குள்ளாகவே எழுந்து நடமாடுவது மிகவும் நல்லது. பிரசவத்திற்குப் பின் சில தாய்மார்களுக்கு மிகவும் கடுமையான வயிற்றுவலி இருக்கலாம். இது சாதாரண வலி நிவாரண மாத்திரைகளுக்குக் கட்டுப்பட்டுவிடும். பிரசவத்திற்குப் பின் சாதாரணமாகத் தாய்மார்களுக்குக் காய்ச்சலேதும் இருக்காது.

ஆனால் ஒரு சில தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த முதல் 24 மணி நேரத்திற்கு லேசான காய்ச்சல் இருக்கும். சில சமயத்தில் சில தாய்மார்களுக்கு காய்ச்சல் அதிகமாய் இருப்பதோடு குளிரும் இருக்கலாம். பிரசவத்திற்குப் பின் தாய்மார்கள் நல்ல சத்தான உணவினைச் சாப்பிட வேண்டும்.

அதிகமான புரதச்சத்து நிறைந்த உணவு, இறைச்சி, மீன், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை நியை சாப்பிடலாம். அதிகமாக கீரை மற்றும் திரவ உணவுகளை எடுத்துக்கொண்டால் இலகுவாக மலம் கழிப்பார்கள். மார்பக கவனிப்பு கர்ப்பத்தின் கடைசி வாரங்களிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டியதாகும்.

மார்பகங்களை நன்கு கழுவுதல் அவசியம். குழந்தையை அடிக்கடி அழும்போதெல்லாம் பால் கொடுப்பதால் தாய்க்குப் பால் ஊறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். மார்புக் காம்பில் வெடிப்போ அல்லது புண்ணோ இருந்தால் காம்புக் கேடயங்களை உபயோகித்தல் அவசியம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum