தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பக் கால உய‌ர் இரத்த அழுத்தம் ஆபத்து

Go down

கர்ப்பக் கால உய‌ர் இரத்த அழுத்தம் ஆபத்து Empty கர்ப்பக் கால உய‌ர் இரத்த அழுத்தம் ஆபத்து

Post  meenu Tue Jan 22, 2013 5:56 pm


இன்றைய அளவில்கூட கர்ப்பிணியின் மரணத்திற்கும், கருக் குழந்தையின் மரணத்திற்கும் முக்கியக் காரணமாக விளங்கும் நோய்களுள் இரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம். இந்த இரத்த அழுத்தம் ஏன் வருகிறது என்றால், பாரம்பரியம், வறுமையான சூழ்நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள், பனிநீர் மிகைப்பு, எப்போதும் டென்ஷன், கவலை போன்ற காரணங்களால் வருகிறது.

கருத்தரிக்கும் முன்போ அல்லது கர்ப்பக் காலத்திலோ இரத்த அழுத்தம் இருந்திருந்தால் அது தாயையும், கருக்குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கும். கர்ப்பச் ஜன்னி, கர்ப்பிணி மரணமடைதல் போன்ற பிரச்சனைகள் சம்பவிக்கும். திடீரென தலைச்சுற்றல், பார்வை மங்கலாகி பின் இருண்டது போன்று தோன்றும்..

இதைத் தவிர்க்க, கர்ப்பிணிக்கு பூரண ஓய்வு, தூக்க மருந்துகள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்து தாய்-சேய் இருவரையும் காப்பாற்றுவார்கள். கர்ப்பக் காலத்தில் கைகால்கள் வீக்கம், டென்ஷன் போன்றவை இருந்தால் கர்ப்பிணி அதை அலட்சியப்படுத்தக்கூடாது.

இரத்த அழுத்தப் பரிசோதனையை கர்ப்பிணிகள் துவக்கக் காலத்திலிருந்தே தவறாமல் மேற்கொள்ள வேண்டும். பிரசவ காலத்திற்குப் பின்னரும் இரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொண்டால்தான் நோய் தொடருகிறதா என்பதை கண்டறிய இயலும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum