அழுகிய பழத்தால் ஆபத்து
Page 1 of 1
அழுகிய பழத்தால் ஆபத்து
அழுகிய பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். எனவே பொதுமக்கள் அழுகிய பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கவும் தமிழக சுகாதாரத் துறை செயலர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சில நூறுகளைத் தாண்டுகிறது. இந்த வயிற்றுப் போக்கு பாதித்தவர்களில் சிலருக்கு காலரா என்றும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் காலரா பற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெயில் காலத்தில் வழக்கமாக வயிற்றுப் போக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த வயிற்றுப் போக்கால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தண்டையார் பேட்டை மருத்துவமனையில் 200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேனி, தர்மபுரியில் தண்ணீரில் போதிய அளவு குளோரின் இல்லாததால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
வயிற்றுப் போக்கைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த துணை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொது மக்கள் காய்ச்சிய தண்ணீரையே குடிக்க வேண்டும். அழுகிய பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சில நூறுகளைத் தாண்டுகிறது. இந்த வயிற்றுப் போக்கு பாதித்தவர்களில் சிலருக்கு காலரா என்றும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் காலரா பற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெயில் காலத்தில் வழக்கமாக வயிற்றுப் போக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த வயிற்றுப் போக்கால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தண்டையார் பேட்டை மருத்துவமனையில் 200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேனி, தர்மபுரியில் தண்ணீரில் போதிய அளவு குளோரின் இல்லாததால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
வயிற்றுப் போக்கைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த துணை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொது மக்கள் காய்ச்சிய தண்ணீரையே குடிக்க வேண்டும். அழுகிய பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» சிரித்தால் ஆயுள் கூடும்
» புகைபிடித்தால் தோல் நோய் வரும் : ஆய்வு!
» ஏலக்காயில் உள்ள சத்துக்கள்
» நார்சத்து, கீரைகள் அவசியம்
» சிரித்தால் ஆயுள் கூடும்
» புகைபிடித்தால் தோல் நோய் வரும் : ஆய்வு!
» ஏலக்காயில் உள்ள சத்துக்கள்
» நார்சத்து, கீரைகள் அவசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum