தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரசு சித்த மருத்துவமனையில் மருந்து இல்லை: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாற்று

Go down

அரசு சித்த மருத்துவமனையில் மருந்து இல்லை: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாற்று   Empty அரசு சித்த மருத்துவமனையில் மருந்து இல்லை: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாற்று

Post  ishwarya Fri May 03, 2013 12:35 pm

தமிழக அரசு நடத்திவரும் சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களாக சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் ஏதும் இல்லாத நிலை உள்ளதென மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றஞ்சாற்றியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “அரசு சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய மக்கள், அங்கு அந்த மருந்துகள் இல்லை என்று கூறப்படுவதால் வெளியில் சென்று தனியார் மருத்துக்கடைகளில் வாங்கும் அவல நிலை உள்ளது. இந்தியாவின் ஈடிணையற்ற இந்த மருத்துவங்களை நாடி மக்கள் வருவது அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்குடன் சில சுயநலமிகள் இப்படிப்பட்ட வேலையை செய்து வருவதாகத் தெரிகிறது.

இந்தியாவில் சித்த வைத்தியம் என்றும், ஆயுர்வேதம் என்றும், யுனானி என்றும் பல்வேறு மருத்துவ முறைகள் உள்ளன. இவை யாவும் ஒன்றையொன்று அனுசரித்தும், நோயாளிகள் எந்த மருத்துவத்தை விரும்புகிறார்களோ அதனை அவர்கள் சுதந்திரமாக தேர்வு செய்யவும் அனுமதித்து வருகின்றன. இதற்குக் காரணம் மக்கள் குணமடைய வேண்டும் என்ற உன்னத நோக்கமே.

இப்படிப்பட்ட உன்னத மருத்துவங்கள் அளிக்கும் மருந்துகளை உற்பத்தி செய்துத் தரும் டாம்கால் என்றழைக்கப்படும் தமிழ்நாடு மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம், சீராக இந்த மருந்துகளை உற்பத்தி செய்து மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைப்பதில்லை என்று கூறப்படுகிறது. கிராமப் புறங்களிலுள்ள மக்கள் இந்த குளிர்காலத்தில் மிகவும் வாட்டும் ஆஸ்த்மா, காய்ச்சல், சளி, முதுகுப் பிடிப்பு போன்ற நோய்களுக்கு மருந்து வாங்க வந்தால், மருந்து இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இப்பிரச்சனையின் மீது உடனடியாக பார்வையைத் திருப்புமாறு தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் போர்க்கால அடிப்படையில் மருந்துகளை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து அவர்களை காப்பாற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் பிறந்த நாள் – அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
» தவறு செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமா இந்திய அரசு?
» தவறு செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்குமா இந்திய அரசு?
»  எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான்
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum