பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: தலிபான்கள் எச்சரிக்கை
Page 1 of 1
பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: தலிபான்கள் எச்சரிக்கை
பாகிஸ்தானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்தக் கோரியும், ஆப்கானில் இருந்து நேட்டோ படைகளை வெளியேற்றக் கோரியும் தெஹ்ரீக் இ தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலை சீர்குலைப்போம் என்றும் எச்சரித்தனர்.
அதன்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், கட்சி அலுவலங்கள் என அவர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் தலிபான்களின் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூத் தொலைக்காட்சி நிலையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்களது நோக்கம். அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக எங்களின் தெஹ்ரீக் இ தலிபான்கள் நாடு முழுவதும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்துவார்கள்.
அரசின் படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் மற்ற தலிபான் வீரர்கள், நாட்டின் மூத்த அரசியல்வாதிகள், கட்சியின் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள். அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
இது எங்களின் தாக்குதலுக்கு கிடைத்த அரசியல் ரீதியான ஒரு அங்கீகாரம் என்றே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் சாதூர்யமாக சண்டையிட்டு வருவது மட்டுமல்ல, அரசியல் வாதிகளையும் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு கீழ்ப்படியவைப்போம்.
இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்
அதன்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், கட்சி அலுவலங்கள் என அவர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் தலிபான்களின் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூத் தொலைக்காட்சி நிலையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்களது நோக்கம். அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக எங்களின் தெஹ்ரீக் இ தலிபான்கள் நாடு முழுவதும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்துவார்கள்.
அரசின் படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் மற்ற தலிபான் வீரர்கள், நாட்டின் மூத்த அரசியல்வாதிகள், கட்சியின் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள். அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
இது எங்களின் தாக்குதலுக்கு கிடைத்த அரசியல் ரீதியான ஒரு அங்கீகாரம் என்றே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் சாதூர்யமாக சண்டையிட்டு வருவது மட்டுமல்ல, அரசியல் வாதிகளையும் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு கீழ்ப்படியவைப்போம்.
இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஜித்தின் ஜனநாயக கோபம்
» தலிபான்கள் மீது, அமெரிக்க தாக்குதலை அனுமதிக்க மாட்டேன்: இம்ரான்கான்
» சினிமாக்காரர்களால் ஆட்சிக்கு அவப்பெயர்! ஜெ., கண்டிப்பு!!
» பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை
» ஹிட்லர் ஆட்சிக்கு வந்து 80 ஆண்டுகள்
» தலிபான்கள் மீது, அமெரிக்க தாக்குதலை அனுமதிக்க மாட்டேன்: இம்ரான்கான்
» சினிமாக்காரர்களால் ஆட்சிக்கு அவப்பெயர்! ஜெ., கண்டிப்பு!!
» பாகிஸ்தானில் வேட்பாளர் சுட்டுக்கொலை
» ஹிட்லர் ஆட்சிக்கு வந்து 80 ஆண்டுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum