தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாயின் அரவணைப்பு

Go down

தாயின் அரவணைப்பு Empty தாயின் அரவணைப்பு

Post  meenu Tue Jan 22, 2013 1:25 pm



தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இதுவே தாய், மகளிடையே பெரிய இடைவெளி ஏற்பட காரணமாகிறது. ஒரு பெண் படிப்படியாக வாழ்க்கை அனுபவங்களைப் பெற்று, அம்மாவாகிறாள். 50 வயதான அனுபவ அம்மா, அதே பக்குவத்தை தனது 25 வயது மகளிடம் எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் படிப்பில், வேலையில், காதலில் தோல்விகளை சந்தித்தாலும் அதுவும் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு அனுபவம் தான். அதில் தவறுகள் ஏற்படும்போது அவர்களுக்கு அதை எடுத்துக்கூறி தன்னம்பிக்கை கொடுக்கும் அம்மாக்களாகவே அனைவரும் இருக்க வேண்டும்.

டீன்ஏஜ் பெண்கள் அன்புக்கு ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். அந்த அன்பை அம்மா கொடுக்காவிட்டால், அவர்கள் அதைத்தேடி வெளியே செல்வார்கள். அங்கு தான் தேவையற்ற காதல் போன்றவை ஏற்படுகின்றன. வேலையில் இருந்து வந்தவுடன் மகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். அன்று பள்ளி, கல்லு ரியில் நடந்தவைகளை பற்றி மனம்விட்டு பேசுங்கள்.

அப்போது தான் தாய் மகளிடையே அன்பும், தோழமையும் ஏற்படும். பெண்களுக்கு அந்த அன்பு வீட்டில் கிடைக்காத போது தான் அதை வெளியில் தேட தேன்றும். எனவே தாய்மார்கள் மகளிடம் கண்டிப்பை மட்டும் காட்டாமல் பாசத்தையும் காட்டுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum