தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குள்ளநரியின் வடக்கு விஜயமும், மண்டையன் குழுத்தலைவரின் இரகசிய சந்திப்பும்.

Go down

குள்ளநரியின் வடக்கு விஜயமும், மண்டையன் குழுத்தலைவரின் இரகசிய சந்திப்பும். Empty குள்ளநரியின் வடக்கு விஜயமும், மண்டையன் குழுத்தலைவரின் இரகசிய சந்திப்பும்.

Post  ishwarya Tue Apr 30, 2013 12:19 pm

1. 1983 இல் தமிழ் மக்களின் இதய பூமியாக விளங்கிய மணலாறு பிரதேச மக்களை விரட்டியடித்து சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியது யார்?

2. அம்பாறையில் சேனநாயக்க சமுத்திரத்தினை உருவாக்கி, கல்லோயா என்ற சிங்கள குடியேற்றத்தினை உருவாக்கியது யார்?

3. திருமலையில் கிளிவெட்டி, சம்பூர், சேருவில தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு வர திட்டம் தீட்டியவர்கள் யார்?

4. தமிழ் பிரதேசம் எங்கும் வலி.வடக்கு உட்பட அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, தமிழ் மக்களை உள்ளுர் அகதிகள் ஆக்கியவர்கள் யார்?

5. 1990ஆம் ஆண்டு வெற்றியின் விளிம்பில்இருந்த தமிழ் இனத்தை இந்தியாவுக்கு விரோதமாக தூண்டிவிட்டு, இந்திய தீர்வுத்திட்டத்தை குழப்பி, விடுதலைப் புலிகளிடம் கபட நாடகம் ஆடியவர்கள் யார்?

6. நிராயுதபாணிகளான தமிழ் மக்களிடம் 'போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்' என்று போர் முழக்கம் செய்தவர்கள் யார்?

7. தமிழ் மக்களின் பாரம்பரிய சொத்தாக, உலக மக்களின் அறிவு கருவூலமாக இருந்த, ஆசியாவிலே பெரிய நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் யார்?

8. சன்னிதியானின் தேரை எரித்து சாம்பலாக்கியது யார்?

9. மகாவலி நீரை வடக்கே வரவிட்டால் தமிழர்கள் விவசாயத்தில் முன்னேறி விடுவார்கள் என்ற வஞ்சக நோக்குடன் மகாவலி திட்டத்தினை வடக்கிற்குள் செல்லவிடாமல் தடுத்தவர்கள் யார்?

10. விடுதலைப்புலிகளை சமாதான வலையில் விழச்செய்து, தமிழரின் இராணுவ பலத்தை சூறையாடியவர்கள் யார்?

இத்தனையும் போதுமா? இல்லை நான் இன்னும் சொல்ல வேண்டுமா?

ஐக்கிய தேசிய கட்சியானது தமிழர்களை பொறுத்தவரை ஒரு சதிகார கட்சி, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து, தமிழர்களின் கலாச்சாரத்தினை அழித்து, தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை பறித்தது மட்டுமல்ல, சமாதானம் என்ற பொறிக்குள் தமிழ் மக்களின் போரட்டத்தினை தள்ளி, தமிழ் மக்களின் இராணுவ பலத்தை சிதைத்த கட்சியாகும். எனவே ஐக்கிய தேசியக் கட்சியையும், ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

இந்திய இராணுவத்துடன் இணைந்து பல்வேறு தமிழ் இளைஞர்களை படுகொலை செய்த, தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்த, மண்டையன் குழுத்தலைவன் சுரேஷ்பிரேமச்சந்திரன் எதற்காக ரணிலுடன் இரகசியச் சந்திப்பு செய்திருக்கிறார்?

மீண்டும் தமிழ் இளைஞர்களை அழிவிற்குள் தள்ளவா? அவர்களுக்கு மீண்டும் புதைகுழி தோண்டவா? நீங்கள் புல்லுக்குளத்திற்குள் தமிழ் இளைஞர்களை புதைத்து விட்டு அசோகா கோட்டலுக்குள் உல்லாசமாக இருந்ததை மறந்து போவதற்கு யாழ்ப்பாணத் தமிழன் என்ன மடையனா?

சுரேஷ் ஐயா நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அச்சுவேலிக்கு தேல்தல் பிரச்சாரத்திற்கு சென்ற வேளை என்ன நடந்தது என்பதனை தாங்கள் மறக்கக்கூடாது. அப்போது புலிகள் இருந்ததால் உங்களை மக்களிடமிருந்து காப்பாற்ற முடிந்தது. இப்போது அது நடக்காது.

இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்காக நீங்கள் நடத்திய கோப்பாய், அச்சுவேலி வதை முகாம்களை தமிழ் மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

நரி வடைக்கு ஆசைப்படலாம், நரியும், காகமும் சேர்ந்து தயிர்வடைக்கும், தக்காளி சட்னிக்கும் ஆசைப்படுவது போல் உள்ளது உங்களின் வடமாகாண ஆட்சிக்கனவு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்
» இரகசிய காதலிக்கு...
» மனித வாழ்க்கையில் இரகசிய உண்மைகள்
» காலியில் முத்தரப்பு இரகசிய பேச்சு அரசுக்கு எதிராக சதிவலையா?
» வடக்கு முகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum