தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவர்ணக்கிளி சுவர்ணக்கிளி

Go down

சுவர்ணக்கிளி  சுவர்ணக்கிளி Empty சுவர்ணக்கிளி சுவர்ணக்கிளி

Post  oviya Mon Apr 29, 2013 6:24 pm

விலைரூ.70
ஆசிரியர் : கலைமாமணி விக்கிரமன்
வெளியீடு: சரசவாணி பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
சரசவாணி பதிப்பகம், 48, ரமணா நகர் விரிவு, 2வது மெயின் ரோடு, மாடம்பாக்கம், சென்னை-73. (பக்கம்: 202. )

எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய பெருங்கதைகளின் தொகுப்பே சுவர்ணகிளி. சிறுகதையின் எல்லைகளைத் தாண்டி அளவில் பெரியதாக உள்ள 11 கதைகளை இந்த நூலில் தொகுத்து தந்துள்ளார் நூலாசிரியர். ஓவியக் கலைஞனின் உணர்வுகளை சித்தரிக்கிறது `பஞ்சவர்ணம்.' `ஒட்டும் உள்ளம்' என்ற கதையின் மூலம் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற கருத்தை விளக்குகிறார். அரசியல் இல்லறத்தில் முடிவதை `ஒரே ஒரு ஓட்டு' சொல்கிறது. நாட்டுப்பற்று, தியாகம், அன்பு போன்ற பல்வேறு நிலைகளை `ஜீவநாதம்' என்ற கதை சொல்கிறது.

ஒரு இலக்கியப் புத்தகத்தை மையமாக வைத்து `இலக்கியத்தின் விலை' என்ற கதை எழுதப்பட்டுள்ளது. உடல் அழகு என்பது அழகல்ல.

அகத்தின் அழகே அழகு என்று எடுத்துக் கூறுகிறது `எது அழகு' என்ற கதை. இவ்வாறு ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கருப்பொருட் களைக் கொண்டு சிறந்த கருத்துக்களை எடுத்துக் கூறுகிறது.

ஒவ்வொரு கதைகளையும் ஒரு எழுத்தாளர் அறிமுகம் செய்துள்ளது இந்நூலுக்குரிய சிறப்பாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum