சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.100 கோடிக்கு திட்டங்கள்
Page 1 of 1
சபரிமலை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.100 கோடிக்கு திட்டங்கள்
சபரிமலையில் நடந்த விபத்தால் ஏற்பட்ட நெரிசலில் 102 பக்தர்கள் கொல்லப்பட்டதையடுத்து, அப்படிப்பட்ட எந்த நிலையும் எதிர்காலத்தில் ஏற்படாமல் தவிர்க்க ரூ.100 கோடி செலவில் பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.
கொச்சியில் சபரிமலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி அறக்கட்டளை வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு கட்டமைப்புக்களையும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளையும் உருவாக்கக்கூடிய 10 திட்டங்களை ரூ.100 கோடி செலவில் நிறைவேற்றப்படவுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலர் கே.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த ஜெயக்குமார், அடுத்த ஆண்டு மகர விளக்கு சேவைக்கு முன் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்.
நிலக்கல் மாவட்டத்திலுள்ள கீழ் முகாமை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், திருக்கோயிலிற்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அந்த இடத்தில் இருந்த கட்டுப்படுத்தப்படும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திருக்கோயில் அருகே ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க பக்தர்கள் காத்திருக்கும் அரங்குகள் அமைக்கப்படும் என்றும், இத்திட்டங்கள் தவிர, மேலும் பல வசதிகளை ஏற்படுத்த நிதி ஆதரவாளர்களை நாடப்போவதாகவும் கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண் தானம் செய்ய உறுதி ஏற்போம்
» தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள்
» பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் திடுக்கிடும் திட்டங்கள்!
» கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை
» ரூ.48 கோடிக்கு ‘சுறா’வை வாங்கிய சன்!
» தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள்
» பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் திடுக்கிடும் திட்டங்கள்!
» கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை
» ரூ.48 கோடிக்கு ‘சுறா’வை வாங்கிய சன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum