தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜேஷ்டா நட்சத்திரலட்சுமி பூஜை

Go down

ஜேஷ்டா நட்சத்திரலட்சுமி பூஜை Empty ஜேஷ்டா நட்சத்திரலட்சுமி பூஜை

Post  birundha Fri Apr 26, 2013 6:45 pm


நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமானதொரு பூஜையாகும். மூலா நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரும் தமிழில் கேட்டை நட்சத்திரம் என்று சொல்வார்கள். சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அக்ஷ்டோத்திரம், ஸஹஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம். ஸஹஸ்ர அர்ச்சனை மிகவும் விசேஷம்.

பால் பாயாசம் மற்றும் பானகம் நைவைத்யம் செய்ய வேண்டும் மற்றும் தேங்காய் பழம் நைவைத்யம் செய்ய வேண்டும். லட்சுமிக்கு நைவைத்யம் செய்த தேங்காயை இனிப்பு செய்து சாப்பிட வேண்டும் அல்லது குருவி சர்க்கரை சேர்த்து எல்லோருக்கும் பிரசாதமாக வினியோகித்து விடலாம். இந்த பூஜை செய்யும் பொழுது வறுமை அகலவும் சௌபாக்யம் வேண்டியும் லட்சுமியை பலவாறு துதிக்க வேண்டும்.

லட்சுமி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம் என்னும் ஸ்தோத்திரத்தை அன்று படிப்பது மிக விசேஷம். உபவாசம் இருக்க முடியாதவர்கள் காலையிலேயே செய்யலாம். காலையிலேயே பூஜை செய்து லட்சுமி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம் படித்து பால், பழம் நைவைத்யம் செய்து பிரார்த்தனை, பிரதட்சணை நமஸ்காரம் செய்து சொடல் வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.

இரு வேளையும் அவசியமாக நெய் விளக்கு ஏற்ற வேண்டும். ஆரத்திக்கு பிறகு புனர் பூஜை செய்து ``ஈஜேஷ்டா நக்ஷ்க்ஷத்திர ஸ்ரீ லக்ஷ்மி பூஜை யன்ன பாரதிரமண முக்ய ப்ராணன அந்தர்கத ஸ்ரீ லக்ஷ்மி ஸமேத ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் ப்ரீத்யர்தம் ஸ்ரீ க்ருஷ்ணார்பண மஸ்து'' என்று சொல்லி அர்ப்பணிக்க வேண்டும்.

லட்சுமி ஹ்ருதயம் படிக்க முடியவில்லை என்றால் லட்சுமி மீதுள்ள ஸ்தோத்திரங்களை சொல்லலாம். இந்த ஜேஷ்டா நட்சத்திர பூஜையை நவராத்திரி ஜேஷ்டா நட்சத்திரத்திலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு ஜேஷ்டா நட்சத்திரத்தன்றும் செய்வது நல்லது. காலையில் பூஜை செய்து விட்டு சாயங்காலமும் நெய் விளக்கேற்றி லட்சுமி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம் படிக்க வேண்டும்.

கடைசியில் சொடல் வைத்து ஆரத்தி எடுத்து விட்டு லட்சுமி நாராயண ப்ரீத்யாதம் என்று சொல்லி கிருஷ்ணா பணமஸ்து செய்ய வேண்டும். இப்படியாக ஒரு வருடம் வரும் ஜேஷ்டா நட்சத்திரங்களிலோ அல்லது இவ்வளவு நட்சத்திரங்கள் செய்வதாகவோ மனதில் நினைத்துக் கொண்டு செய்யலாம்.

ஜேஷ்டா நட்சத்திர காலத்தில் லட்சுமி பூஜை செய்வதும், லட்சுமி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம் படிப்பதும் வறுமை அகன்று செல்வம் பெருகும் என்பது பொருள். படி அரிசியை விட படமும் குத்து விளக்கும் சிறந்தது. குத்து விளக்கு வைத்தால் மாலை வரை மலையேறாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum